Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Kogilavani / 2011 டிசெம்பர் 09 , பி.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.ஜே.எம்.ஹனீபா)
அரசாங்கத்தினால் பெரும்போக நெற்செய்கைக்காக விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரமானியங்கள் தற்போது துரிதமாக வழங்கப்பட்டு வருவதாக பெரும்பாக உத்தியோகத்தர் வை.எம்.ஏ.கபூர் தெரிவித்தார்.
சம்மாந்துறை களஞ்சிய சாலையிலிருந்து சம்மாந்துறை, மல்வத்தை, காரைதீவூ, சாய்ந்தமருது, கல்முனை ஆகிய பிரதேசங்களுக்கு அவ்வப் பிரதேச விவசாயப் பிரதிநிதிகளுடாக மானிய உரங்கள் வழங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
உரமானியங்கள் தாமதமாக வழங்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்த குறைபாடுகள் தொடர்பாக பெரும்போக உத்தியோகத்தர் வை.எம்.ஏ.கபூரிடம் கேட்டபோதே அவர் இதனை தெரிவித்தர்ர.
இதுத் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது சம்மாந்துறை களஞ்சிய பிரிவுக்குட்பட்ட விவசாய காணிகளுக்கு தேவையான உரங்கள் அனைத்தையும் முழுமையாக பெற்று களஞ்சியப்படுத்தக் கூடிய களஞ்சிய வசதியின்மையினால் எங்களிடமுள்ள ஒரே ஒரு களஞ்சியத்தின் கொள்ளளவுக்கு ஏற்ப உரமானியங்கள் களஞ்சியப்படுத்தப்பட்டு வழங்கப்படுகின்றது. இதனால் சகலருக்கும் ஒரே தடவையில் உர மானியங்களை வழங்கமுடியாதுள்ளதாக தெரிவித்தார்.
சம்மாந்துறை களஞ்சியசாலை பிரிவிலுள்ள விவசாயிகளுக்கு 2367. 27 மெற்றிக் தொன் யூரியா உரமும், 780. 33 மெற்றிக் தொன் ரீ.எஸ்.பி உரமும், 668. 27 மெற்றிக் தொன் எம்.ஓ.பி உரமும் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் களஞ்சிய முகாமையாளர் எம்.திமிர உட்பட விவசாய பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
13 minute ago
27 minute ago
2 hours ago