Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Super User / 2011 டிசெம்பர் 13 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இளைஞர்களை உள்வாங்கி மீண்டும் கட்சியை பலப்படுத்த முயற்சிப்பதே எம்மெல்லோரினதும் கடமை என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 25ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாகாண சபை உறுப்பினர் முஸ்லிம் சமூகத்திற்கும் முஸ்லிம் அரசியல் பிரமுகர்களுக்கும் விடுத்துள்ள வெள்ளி விழா அறைகூவலிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டள்ளது.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டடுள்ளதாவது,
இந்நாட்டு முஸ்லிம்கள் தமது விகிதாசாரத்திற்கேற்ப கல்வி, சுகாதாரம், குடியிருப்பு, காணி பயன்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் இன்னோரன்ன சகல வசதிகளிலும் தன்னிறைவு அடையும் போதே நாம் உண்மையான சுதந்திரத்தைப் பெறமுடியும்.
நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த சகல ஆட்சியாளர்களும் சிறுபான்மையினருக்கான விகிதாசாரத்தைப் புறக்கணித்து அநீதியான முறையிலேயே ஆட்சி செய்தனர். தற்போதும் அவ்வாறே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இதனை உணர்ந்த தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியில் தனி கட்சியமைத்துப் போராடிக்கொண்டிருந்த வேளையில் எமது முஸ்லிம் பிரதிநிதிகள் பேரினவாத கட்சிகளின் ஏஜன்டுகளாக செயற்பட்டுக் கொண்டிருந்தனர்.
இவ்வாறு பல காலங்களை கடந்துகொண்டிருந்த வேளையிலேயே மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் இளைஞர்கள் மத்தியில் இந்நாட்டு முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும், பாதிப்புக்களையும் அட்டவணைப்படுத்தி பயிற்சிப் பட்டறைகளை நடாத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தியதன் தாக்கமே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆலவிருட்சமாகும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டதன் பின்னர் இந்த நாட்டின் ஆட்சியாளர்களைத் தீர்மானிக்கும் சக்தியாக எமது முஸ்லிம் சமூகம் மாறியதோடு பாரிய பல அபிவிருத்திகளையும் செய்யக்கூடியதாக விருந்தது.
இதனையுணர்ந்த பேரினவாதிகள் கட்சிக்குள் பிளவுகளை உண்டுபண்ணி கட்சியை அழிக்கும் சதிமுயற்சியில் ஈடுபடத் தொடங்கினர். தலைவர் அஷ்ரபின் மரணம் பேரினவாதிகளின் சதி முயற்சிக்கு மிகவும் இலகுவாகிவிட்டது.
இன்று முஸ்லிம் காங்கிரஸ் பல கூறுகளாக பிரிந்து தெருவுக்கொரு கட்சி என்ற நிலமைக்கு வந்துவிட்டது. முஸ்லிம் காங்கிரஸை வளர்த்த சமூகம் இன்று முதுமையடைந்துகொண்டு வருகின்றது. இவ்வாறு பலவகையான இடையூறுகள் நடைபெற்றுள்ளபோதும் பெரும்பான்மை முஸ்லிம் மக்களின் நம்பிக்கையையும், ஆதரவையும்பெற்ற கட்சி முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரமே.
25 வருட வெள்ளி விழாவை கொண்டாடும் எமது கட்சி தலைவர் அஷ்ரபின் வழியில் புதிதாக இளைஞர்களை உள்வாங்கி இன்றைய எமது முஸ்லிம்களின் இழிவு நிலமைகளை அட்டவணைப்படுத்தி முஸ்லிம்களுக்கு பலம்வாய்ந்த ஒரேயொரு தனிக்கட்சியின் அவசியத்தை பயிற்சிப்பட்டறைகள் மூலமும் தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மீண்டும் கட்சியைப் பலப்படுத்த முயற்சிப்பதே எம்மெல்லோரினதும் கடமையாகும்.
எனவே இந்த பணியை கட்சியிலிருந்து பிரிந்து சென்று சிறு கட்சிகளாக அரசிடம் சரணடைந்துள்ள கட்சி பிரமுகர்கள் உணர்ந்து முஸ்லிம் காங்கிரசின் ஆலவிருட்ச நிழலின் கீழ் ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலமே எமது சமுக விடுதலையை நாம்பெறமுடியும்.
எனவே எமது சுயநலங்களையும், தாள்வு மணப்பான்மையையும் தூக்கிவீசிவிட்டு எமது கட்சியின் 25ஆவது ஆண்டு நிறைவில் ஒன்றுபட்டு செயற்பட திடசங்கற்பம் கொள்ளவேண்டும்.
munas Tuesday, 13 December 2011 11:12 PM
30 வயதிற்குட்பட்டவர்களே இளைஞர்களாவர். ஆனால் 30 வயதிற்கு மேற்பட்ட மாகாண சபை உறுப்பினர் இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரா உள்ளார். முதலில் இவர் பதவி விலகி இன்றைய இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இவரை போன்று தான் எமது ஊரான கல்முனையில் 40 வயதான ஒருவரே இளைஞர் காங்கிரஸின் கல்முனை அமைப்பாளரா உள்ளார். முதலில் இதனை மாற்றியமைக்க வேண்டும்.
Reply : 0 0
kalmunaiyaan Tuesday, 13 December 2011 11:45 PM
காமடி கீமடி பண்ண இல்லையே?
Reply : 0 0
kulathooran Wednesday, 14 December 2011 12:43 AM
மு.கா. யாப்பு இளைஞர் விடயமாக என்ன வயதெல்லை வைத்துள்ளதோ?
Reply : 0 0
pasha Wednesday, 14 December 2011 02:22 PM
வாழ்கையின் இறுதி கட்டத்தை அடைந்துவிட்ட ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளித்து மீண்டும் ஓட விடலாம் என ஜமீல் கனவு காண்கிறார்
Reply : 0 0
uooran Wednesday, 14 December 2011 03:41 PM
கௌரவ மாகாண சபை உறுப்பினர் அவர்களின் முயற்சி பாராட்டக்கூடியது.
கிராமசேவகர் பிரிவு மட்டத்தில் இருந்து இளைய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு சிறந்தமுரெயில் பயிற்சிகள் வழங்கி நமது சமூகத்தை வழிநடாத்தக்கூடிய தன்மையை உருவாக்க வேண்டும்.
இளைஞ்சர் காங்கிரசை வழிநடாத்துபவர் இளைன்செராக இருக்க வேண்டியதில்லை. கௌரவ ஜமீல் அவர்களே இதற்க்கு பொருத்தமானவர்
கௌரவ ஜமீல் அவர்கள் அவரது சிறு பராயத்தில் இருந்து தலைமைத்துவ பண்புடன் வள்பவர்.
சாரனியத்தில் ஜனாதிபாதி விருது பெற்றவர்.
Reply : 0 0
munayuraan Wednesday, 14 December 2011 06:13 PM
முஸ்லிம் காங்கிரசின் யாப்பை இனிதான் பார்க்கணும். அதையும் சாதகமா எழுதியாச்சோ தெரியாது
Reply : 0 0
KILAKKIN OOR KURUVI Thursday, 15 December 2011 01:32 AM
கட்சியின் தலைவர்தான் நாட்டில் அபிவிருத்தி, சட்டம் எல்லாம் நன்றாக நடைபெறுவதாக கூறும்போது ஏன் இந்த விளையாட்டு எமது பிள்ளைகளுக்கு தொழில் தேடிக்கொடுப்பதற்கு தலைவரோடு இணைந்து எதையாவது செய்யலாமே.
Reply : 0 0
al razak Thursday, 15 December 2011 07:40 AM
உண்மையில்இ கெளரவ ஜமீல் அவர்கள் கூறிய கருத்து சரியானவை, அதற்கு என் ஆதரவை வழங்குகிறேன்.
Reply : 0 0
mohammed ismail mohammed rayees Sunday, 18 December 2011 10:21 PM
insha allah muslima pirenthe anaiverin kadamai ithu. so ennale mudinthethai inshaallah nan kaddayeme saiven.
Reply : 0 0
maruthooran Friday, 23 December 2011 01:01 AM
வரவேற்கத்தக்க விடயம். முன்கோபம் எல்லாத்தயும் தியாகம் பண்ணுங்க. மத்ததெல்லாம் அதுவா நடக்கும்.
Reply : 0 0
muhammath Ranoos Tuesday, 27 December 2011 02:44 AM
we r wellcome your perspectives on our party re building process. your idea should be implement soon and urgent in recent. Aay allah all the wealth you.
Reply : 0 0
sainthamaruthu Sunday, 01 January 2012 08:21 PM
முதல்ல உங்களப் பலப்படுத்திக்கங்க. அடுத்த தோ்தலில் உங்கள் இருப்பே கேள்விக்குறிதான்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
22 minute ago
2 hours ago