Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Kogilavani / 2011 டிசெம்பர் 14 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கிழக்கு மாகாணத்தில் முறையற்ற விதத்தில் இடம்பெறும் ஆசிரியர் இடமாற்றத்தை நிறுத்தக் கோரி கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட ஆசிரியர்கள் இன்று புதன்கிழமை கல்முனை பொது நூலகத்திற்கு முன்பாக ஆர்பாட்டமொன்றில் ஈடுப்பட்டதுடன் வலயக்கல்விப் பணிப்பாளரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்துனர்.
இதன்போது, பெண்களின் இடமாற்றத்தை இரத்து செய், எமது குழந்தைகளின் உரிமையை பாதுகாருங்கள், 5 மாத குழந்தையை என்னை விட்டுப் பிரிக்காதே, போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை தாங்கிய வண்ணம் இவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதேவேளை, மகஜரை பெற்றுக்கொண்ட கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.தௌபிக் இவ்விடையத்தை உடனடியாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்ட வருவதாகவும் உறுதியளித்தார்.
இதன்போது, குறித்த இடத்திற்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.துல்கர்நையிமிடமும் மகஜர் கையளிக்கப்பட்டது. இதன்போது மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.துல்கர்நை தெரிவிக்கையில்,
மேலதிக ஆசிரியர்கள் என்பது கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல ஏனைய மாகாணங்களிலும் உள்ளது. ஆசிரியர் பற்றாக்குறைப் பிரச்சினையை புதிய நியமனத்தின் மூலம் தீர்த்துக் கொள்ளலாம். கடந்த இடமாற்றத்தின் போது விடப்பட்ட அதே தவறுகள் இவ்விடமாற்றத்திலும் நிகழ்ந்துள்ளது. இவ்விடமாற்றத்தில் பெண்கள் அதிலும் கைக் குழந்தைகள் உள்ள ஆசிரியர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்விடமாற்றத்தை எப்படியாவது ரத்துச் செய்வேன். அதற்குரிய நடவடிக்கைகளை ஏற்கனவே மேற்கொண்டுள்ளோம் என்று தெரிவித்தார்.
kadamai piriyan Wednesday, 14 December 2011 11:00 PM
என்னய்யா வேறு திணைக்களத்தில் கடமை பார்க்கும் ஊழியர்களுக்கு இந்த பிரச்சினைகள் இல்லையா ? இடமாற்றம் கொடுக்கப்படுவதில்லையா? ஆசிரியர்களுக்கு மட்டும் ஏன் இந்த போராட்டம்?
Reply : 0 0
jone Thursday, 15 December 2011 07:06 PM
ஒவ்வொரு தினைக்களமும் இவ்வாறு இடமாற்றத்துக்கு போராடினால் செய்தால், நாட்டின் நிலைமை என்ன? நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் எல்லா தினைக்களத்திலும் உண்டு.
Reply : 0 0
Meenavan Friday, 16 December 2011 07:22 AM
இத ஒழுங்கா திட்ட மிட்டு செய்தப்போ அப்போதைய மா.க.ப பிழை எண்டது மாகாண சபையின் மெத்தப் படிச்ச அமைச்சுக்கள். இப்போ யார் பிழையோ ..................... சிவா சிவா தம்பி மார் உம்மட போராட்டம் நியாயம் தான் ஆனா இதையும் அரசியலாக்கிப் போடாதிங்கோ ....
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
25 minute ago
2 hours ago