2025 ஜூன் 25, புதன்கிழமை

சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஐவருக்கு தண்டப்பணம் விதிப்பு

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 14 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோமான முறையில் மதுபானம் விற்பனை செய்த 5 பேருக்கு தண்டப்பணமாக 50 ஆயிரம் ரூபாவை செலுத்துமாறு பொத்துவில் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஆ.ஈ.அலெக்ஸ்ராஜா இன்று புதன்கிழமை உத்தரவிட்டார்.

தம்பிலுவில், விநாயகபுரம், திருக்கோவில் பிரதேசங்களில் அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் சாராயம், பியர் ஆகிய மதுபானங்களை விற்பனை செய்த 5பேரை நேற்று செவ்வாய்க்கிழமை பொலிஸார் கைது செய்தனர்.

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை இன்று புதன்கிழமை பொத்துவில் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி ஆ.ஈ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் ஆஜர்படுத்திய போது இவர்களை தலா 10 ஆயிரம் ரூபா வீதம் தண்டப்பணம் செலுத்துமாறும் தண்டப்பணம் செலுத்த தவறும் பட்சத்தில் 3 மாதகாலம் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .