2025 ஜூன் 25, புதன்கிழமை

திராய்கேணி கிராமத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருமாறு மக்கள் கோரிக்கை

Kogilavani   / 2011 டிசெம்பர் 15 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட திராய்க்கேணி கிராமத்தில் நீண்ட காலமாக நிலவிவரும் அடிப்படை மற்றும் உட்கட்டமைப்புத் தேவைகளை நிறைவேற்றித் தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

நூறு வீதம் தமிழ் மக்களைக் கொண்ட இக் கிராமத்தின் பிரதான போக்கு வரத்து வீதி கடந்த 30 வருடங்களாக மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்ற போதும், இதுவரை இவ் வீதி திருத்தியமைக்கப்படவில்லை.
 
அதேவேளை, இக்கிராமத்துக்கென நூல் நிலையமொன்று இல்லாமை குறித்து இங்குள்ள வாசகர்களும், மாணவர்களும் விசனம் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே இங்கு நூலகமாக இயங்கி வந்த சனசமூக நிலையக் கட்டிடம் தற்போது சேதமடைந்து - புல், புதர்கள் படர்ந்த நிலையில் பாழடைந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். 

தாழ் நிலப் பகுதியான திராய்கேணிக் கிராமத்தில் வடிகான் வசதிகள் அமைத்துக்கொடுக்க படாமையினால் சிறிய மழைக்கும் வெள்ளத்தில் மூழ்கும் அபாய நிலையை எதிர்நோக்கியுள்ளது.
 
மேலும், பஸ் தரிப்பிடம் மற்றும் சந்தைக் கட்டிடம் போன்றவை மிகவும் சேதமடைந்து காணப்படுவதால் இவற்றினை உபயோகிக்க முடியாத நிலையில் இப் பிரதேச மக்கள் உள்ளனர்.

திராய்க்கேணியில் சுமார் 135 குடும்பங்கள் உள்ளன. 1990 ஆம் ஆண்டு ஏற்பட்ட இன முரண்பாடு காரணமாக தமது இருப்பிடங்களிலிருந்து வெளியேறிய திராய்க்கேணி மக்கள் மீண்டும் 1994 ஆம் ஆண்டு மீள்குடியேறினர்.

ஆயினும், இக் கிராமத்தின் பல்வேறு தேவைகள் இதுவரை நிறைவேற்றிக் கொடுக்கப்படாமை குறித்து இங்குள்ள மக்கள் கவலை தெரிவிக்கும் அதேவேளை, தமது தேவைகளை உரிய தரப்பினர் கவனத்திற்கொண்டு  அவற்றினை உடனடியாக நிறைவேற்றித் தருமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர். 

     

                                                                                                                                                                                                   


You May Also Like

  Comments - 0

  • hameed Sunday, 18 December 2011 06:45 AM

    அது சரி இக்கூரைகளை கழற்றியவர்கள் யார்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .