2025 ஜூன் 25, புதன்கிழமை

கல்முனை, தமிழ் பிரதேச மக்களுக்கு வாழ்வாதார உபகரணங்கள் கையளிப்பு

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 16 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(ஹனீக் அஹமட்)

கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ளோருக்கு வாழ்வாதார உபகரணங்களை வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை நற்பிட்டிமுனை வள நிலையத்தில் இடம்பெற்றது. இதன்போது 18 பயனாளிகள் மேற்படி உபகரணங்களைப் பெற்றுக்கொண்டனர்.

கல்முனை தமிழ் பிரதேச செயலக சமூகசேவை உத்தியோகஸ்தர் கே.வேதநாயகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உபகரண்களை வழங்கி வைத்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பியசேனவின் முயற்சியினால் - ஜனாதிபதி செயலகத்தினூடாகப் பெற்றுக் கொள்ளப்பட்ட இந்த வாழ்வாதார உபகரங்கள் - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினைத்தினையொட்டி வழங்கப்பட்டன. தச்சு, கட்டிட நிர்மாணம் மற்றும் விவசாயத் தொழில்களுக்குத் தேவையான உபகரணங்களே இதன்போது வழங்கப்பட்டது.

மேற்படி நிகழ்வில் கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் வீ.லவநாதன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.உதயன், நாடாளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக இணைப்பாளர் எம்.ஐ.எம்.றியாஸ், கல்முனை இணைப்பாளர் எஸ்.தீபன், கிராம சேவைகளயார்களுக்கான நிருவாக அதிகாரி ரீ.வீ.புவன்ராஜா மற்றும் கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்தர் பீ.கோகுலராஜன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • pasha Friday, 16 December 2011 07:52 PM

    மக்கள் சேவகன் பியசேன வாழ்க.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .