Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Super User / 2011 டிசெம்பர் 17 , மு.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு மாநகர சபையும் கல்முனை மாநகர சபையும் இணைந்து செயற்படுவது என இணக்கம் காணப்பட்டுள்ளதாக கல்முனை மேயர் சிராஸ் மிராசாஹிப் தெரிவித்தார்.
கொழும்பு மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மிலுடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த இணக்கம் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கிணங்க இரு மாநகரங்களுக்குமிடையில் கல்வி, கலை, கலாசார மற்றும் அரசியல் போன்ற விடயஙகளில் பரிமாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாக மேயர் சிராஸ் மேலும் தெரிவித்தார்.
கொழும்புமாநகர சபை ஐக்கியதேசியகட்சியின் கட்டுப்பாட்டிலும் கல்முனைமாநகர சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்டுப்பாட்டிலும் உள்ளமைகுறிப்பிடத்தக்கது.
kulathooran Saturday, 17 December 2011 04:03 PM
மேயர் சிராஸ் மு.கா.வின் யாப்பினையும் சற்று படியுங்கள், அரசுடன் இணைந்துள்ள உங்கள் கட்சியை, கொழும்பு மா நகர சபையுடன் இணைந்து செல்வது கூட்டமைப்பு அரசு அனுமதிக்குமா? இன்னுமொன்றை ஞாபகமூட்டுகிறேன் உங்களுக்கான ஊரினது வரவேற்பில் தலைவர் ஹகீம் கூறியது ,"அரசியல் சாக்கடையில்" நீங்கள் படிக்கவேண்டியது நிறையவே உள்ளது என்பதாகும்.
Reply : 0 0
சிறாஜ் Sunday, 18 December 2011 12:19 AM
இது எப்படி இரண்டு கட்சிகள், அதுவும் ஆளும் கட்சி பங்காளர்கள் எதிர்க்கட்சியுடன் இணைந்து செயற்பட போவதாக கூறுவது எங்கேயும் கேட்ட ஞாபகமா..
Reply : 0 0
AHAMED JUNAID Sunday, 18 December 2011 01:12 AM
கட்சியின் உயர்பீடம் இந்த இணைப்பை விரும்புமா? குறிப்பாக மேயர் முஸம்மிலுடன் இணைந்து உள்ளதை விரும்புமா ?
Reply : 0 0
Majeed Sunday, 18 December 2011 03:15 AM
இரண்டு மாகாணங்களில் உள்ள இரு சபைகள் எப்படியா இணைந்து செயற்பட முடியும்? எப்படியும் ஒரு செய்தி வரனும்.
Reply : 0 0
jowsi Sunday, 18 December 2011 03:30 AM
ரணில் உறவை புதுப்பிக்க தலைவர் சொல்லிக் கொடுத்தாரோ?
Reply : 0 0
Srilankan Sunday, 18 December 2011 03:43 AM
நீங்கள் படிக்கவேண்டியது நிறையவே உள்ளது.
Reply : 0 0
ummpa Sunday, 18 December 2011 05:12 AM
இணைந்து தாழ்ந்து, ஒன்றுமே நடக்க யாரும் விடமாட்டார்கள் .இருந்தாலும் UNP , PA சார்ந்த பிரச்சினை இங்கு கொடிகட்டும் எனவே கொஞ்சம் தூர நோக்கு இல்லாவிட்டால் உங்கள் சீட்டு கிழிந்துவிடும் மக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள்.
Reply : 0 0
zeefa Tuesday, 20 December 2011 06:28 PM
செய்தி வரணும் என்பதற்காக ஆணையயை பூனையக்குவேன் பூனையை ஆணையக்குவேன் என்று சொல்ல வேண்டாம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
17 minute ago
1 hours ago