2025 ஜூன் 25, புதன்கிழமை

'அம்பாறை மகாஓயா தாதியர் விடுதியின் கூரை உடைந்து விழும் அபாய நிலையில்'

Kogilavani   / 2011 டிசெம்பர் 18 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

அம்பாறை மகாஓயா தாதியர் விடுதியின் கூரை உடைந்து விழும் அபாய நிலையில் இருப்பதாக தூர பிரதேசங்களில் இருந்து வந்து மேற்படி விடுதியில் தங்கியுள்ள தாதியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேற்படி விடுதியில் 24 பேர் தங்கி மகாஓயா வைத்தியசாலையில் கடமையாற்றி வருகின்றனர். 20 வருடங்களுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்ட இவ் விடுதியில் தங்கியிருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் கூரையும் 'சீலிங்கும்' எந்த நேரமும் தலையில் உடைந்து விழலாம் என்ற நிலையில் அச்சத்துடனேயே தங்கி வருகின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் கே. இலங்கமுதலி கூறுகையில்,

தான் இவ்வைத்தியசாலைக்கு வந்து குறுகிய காலமாவதாகவும் இவ்விடயம் சம்பந்தமாக தாதியரும் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினரும் பலமுறை தனக்கு தெரிவித்துள்ளதாகவும் கூறினார். இதேவேளை, இவ்விடயம் சம்பந்தமாக சுகாதார அமைச்சுக்கு அறிவித்துள்ளதாகவும் இதுவரை எந்த பதிலும் கிடைக்காத நிலையில் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வைத்தியசாலையில் கடமை புரிவதற்கென 48 தாதியர்கள் தேவையான நிலையில் 27 பேர் மட்டுமே கடமை புரிகின்றனர். இவர்களில் 24 பேர் தாதியர் விடுதியில் தங்கியே சேவை புரிகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .