Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 டிசெம்பர் 19 , மு.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் சமமின்மையை போக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர் இடமாற்றத்தால் காணப்படும் குறைபாடுகள் நிவர்த்திக்கப்பட்டு மேன்முறையீடு செய்துள்ள ஆசிரியர்களுக்கு உரிய நிவாரணம்
வழங்கப்படுமன கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தெரிவித்தார்.
வெளிவலயங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களில் கூடுதலானோர் பெண் ஆசிரியைகளாகவுள்ளனர். இவர்கள் கல்வியமைச்சுக்கு மேன்முறையீடு செய்துள்ளனர். இவர்களின் மேன்முறையீடுகள் சாதகமான முறையில் பரிசீலிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
கல்வியமைச்சினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களையும் வழிகாட்டல்களையும் சில கல்வி வலயங்கள் கவனத்திற்கொள்ளாமை காரணமாக கூடுதலான பெண் ஆசிரியைகள் இவ்விடமாற்றத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர். இந்நிலைமை ஏற்படக் காரணமாகவுள்ள கல்வி வலயப் பணிப்பாளர்கள் அழைக்கப்பட்டு இடமாற்றப் பட்டியல்கள் சீர்செய்யப்படுகின்றவெனவும் என்.ஏ.ஏ.புஸ்பகுமார குறிப்பிட்டார்.
அந்த வகையில் பாலுட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள், நோய்வாய்ப்பட்டுள்ளோர், குடும்பத் தாய்மார்கள் ஆகியோர் மூதூர், கிண்ணியா போன்ற கல்வி வலயங்களுக்கு இடாற்றம் செய்யப்படுவது தவிர்க்கப்படும். இவர்களது இடத்திற்கு திருமணமாகாத ஆசிரியைகள், ஆசிரியர்கள் அனுப்பிவைக்கப்படுவார்கள்.
சகல ஆசிரியர் தொழிற்சங்கங்களையும் எதிர்வரும் 22ஆம் திகதி வியாழக்கிழமை தாம் சந்திக்கவுள்ளதாகவும் செயலாளர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
18 minute ago
1 hours ago