2025 ஜூன் 25, புதன்கிழமை

பியசேன எம்.பி பங்குபற்றலுடன் அட்டாளைச்சேனையில் சிரமதானம்

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 19 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(ஹனீக் அஹமட்)

அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல். நசீர் உள்ளிட்டோரின் பங்குபற்றுதலுடன் - நேற்று ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் சிரமதான நடடிவடிக்கையொன்று இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை புளு இலவன் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இச்சிரமதான நிகழ்வில் - அட்டாளைச்சேனைப் பிரதேசத்திலுள்ள மையவாடி மற்றும் அதன் சுற்றுப்புறம் ஆகியவை தூய்மை செய்யப்பட்டன.

இச்சிரமதானத்தில், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுபப்பினர் பி.எச்.பியசேன, அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல்.நசீர், புளு இலவன் விளையாட்டுக் கழகத் தலைவர் ஹம்ஸா சனூஸ் மற்றும் கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, மையவாடிக்கான பாதையொன்றினை அமைப்பதற்கும், சுற்றிவர மின்சார வெளிச்சம் வழங்குவதற்குமாக - தான் நிதி ஒதுக்கீடு செய்வதாக அங்கு வருகை தந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன உறுதியளித்தார்.

புளு இலவன் விளையாட்டுக் கழகம் - ஒவ்வொரு வருடமும் இவ்வாறான சிரமதான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • senaiyuraan Monday, 19 December 2011 05:56 PM

    புளு இலவன் விளையாட்டு கழகத்தின் சேவையை பாராட்டுவதோடு தொடந்தும் இவைபோன்ற சேவைகளை செய்ய பிராத்திக்கின்றேன்.

    Reply : 0       0

    BESC Monday, 19 December 2011 06:11 PM

    bulu elavan sports club நடத்திய சிரமதானத்தினை அதிகாலையில் ஆரம்பித்துவைத்த அமைச்சர் m.s. உதுமாலெப்பை மற்றும் இரண்டாம் கட்ட நிகழ்வில் கலந்து சிரப்பித்த அட்டளைச்சேனை தவிசாளர் மற்றும் பாராளுமன்ர உறுப்பினர் பியசேன ஆகியோர்களது பொதுப் பணி தொடர வாழ்த்துகின்றேன்.

    Reply : 0       0

    sufi Monday, 19 December 2011 07:34 PM

    புளூ இலவன் விளையாட்டுக் கழகம் இதுபோன்ற சேவைககளை தொடர எனது வாழ்த்துக்கள்.


    Reply : 0       0

    Muhammed Rifnas Tuesday, 20 December 2011 07:17 PM

    தம்பி, நடு நிலையான செய்தியை எழுத தெரியாதா? கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பியசேன அவர்களும், கெளரவ தவிசாளர் அவர்களும் இச்சிரமதானத்தில் பிற்பகுதியில் பங்கு பற்றினர். ஆனால் இச்சிரமதானத்தினை ஆரம்பித்து வைத்த கௌரவ அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையை ஆரம்பித்து வைத்ததை எழுதாதது சரியா? இதுவும் அட்டாளைச்சேனை பொதுச்சந்தை போன்றுதான் உங்களுடைய செயற்பாடு. பத்திரிகை தர்மத்தை கடைபிடியுங்கள்.

    Reply : 0       0

    சிறாஜ் Wednesday, 21 December 2011 02:34 PM

    முஹம்மட் றிப்னாஸ் களத்தில் நின்று வேலை செய்தவர்களைத்தான் இங்கு போடப்பட்டுள்ளது. அந்த வகையில் அமைச்சர் வீட்ட இருந்தால் இங்கு எப்படி வருவார் புகைப்படத்தைப் பாருங்கள் மண்வெட்டியுடன் பிரதேசசபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் நிற்கிறாரே அவரின் பெயரும் இல்லையே. இதுக்கென்ன சொல்லப்போகிறீர்கள்/ சொல்லுங்க.

    Reply : 0       0

    safa Wednesday, 21 December 2011 06:23 PM

    நல்ல சேவை மிக்க நன்றி blue eleven ....
    மேலும் இதை அரசியல் நோக்கத்திற்காக செய்யாமல் மக்கள் நலனுக்காக செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். மேலும் இதை போன்று எமது ஊரில் நிறைய இடம் அசுத்தமாக கிடக்கிறது என்ன தொடர்ந்து செய்யலாமா?

    Reply : 0       0

    pasha Wednesday, 21 December 2011 07:37 PM

    இங்கு ஒருவர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரையும் மாண்பு மிகு மாகான அமைச்சரையும் ஒப்பிட்டுள்ளார் இது குடிசையையும் கோபுரத்தையும் ஒப்பிடுவதற்கு சமன்.

    Reply : 0       0

    ஹனீக் அஹமட் Thursday, 22 December 2011 02:16 AM

    Muhammed Rifnas, செய்தி என்பது - ஒரு நிகழ்வை அல்லது சம்பவத்தை அறிக்கையிடுதலாகும். அதாவது, ஒரு செய்தியாளர் களத்தில் நின்று திரட்டும் விடயங்களையே அவர் அறிக்கையிட வேண்டும். அந்தவகையில், நாம் அட்டாளைச்சேனைனப் பிரதேச சபைத் தவிசாளரின் அழைப்புக்கிணங்கவே - இந்த நிகழ்வுக்குச் சென்றிருந்தோம்.

    அதன்போது, நிகழ்ந்தவற்றினையே நிழற்படங்களாகப் பதிவிட்டு, செய்தியாகவும் அறிக்கையிட்டுள்ளோம்.

    தவிரவும், ஊடகவியல் பற்றியும் - ஊடக ஒழுங்கு முறை குறித்தும் நாம் துறைசார் ரீதியாகவும், அனுபவ ரீதியாகவும் மிக நன்கறிவோம்!

    Reply : 0       0

    சிறாஜ் Thursday, 22 December 2011 04:51 AM

    பாஷா அது என்ன குடிசை கோபுரம்.. கொஞ்சம் தெளிவா சொல்லுங்க. பாப்பம் அதனை எங்களுக்கும் புரியனும் இல்ல ஹி ஹி ஹி எங்கிருந்து வந்த கோபுரமாம் அது கோணாவத்தை கண்ணாப்பத்தைக்குள் என்பது தெரியாதாக்கும் ஹா ஹா ஹா.
    அரசியலில் இன்றைய உறுப்பினர் நாளைக்கு எங்கிருக்கின்றார் என்பது தெரியாது ம...... மாதரி பேசாம மனிதன் பாதரி பேசனும் சரியா லூவன்னா...பாஷா

    Reply : 0       0

    besc Thursday, 22 December 2011 05:14 AM

    சிராஜ் அமைச்சர் ஆரம்பித்துவிட்டு போகல்ல. இங்கு இருந்து வேலை செய்துதான் சென்றார். சிலரை (மு)போன்று போட்டோக்கு போஸ்ட் கொடுக்க இங்கு அமைச்சர் வரவில்லை சிரமதானம் செய்யத்தான் வந்தார் செய்து முடித்தார் சென்றார்.

    Reply : 0       0

    zarjoon Thursday, 22 December 2011 05:26 AM

    செய்தியாளர் களத்த்திக்கு வரும்போது நடப்பவைகளை எழுதினாலும் தகவல்களை சரியாக திரட்டி நெறிப்படுத்தி எழுதுங்கள். யாரோ பெத்த பிள்ளைக்கு யாரோ பெயர் வைப்பது இதுதான் .
    தலைமை தாங்கியது யார் என தெரியாமல் எப்படி நெறிப்படுத்திநீர்கள். தலைமை தாங்கியது எமது கழகத்தின் தலைவரே அன்றி அரசியல்வாதிகள் எவரும் இல்லை.

    Reply : 0       0

    zarjoon Thursday, 22 December 2011 05:37 AM

    எமது கழகம் விளையாட்டிற்கு அப்பால் கல்வி கலாசார விடயங்களையும் நடத்தி வருகின்றமையை தெரியப்படுத்துகின்றேன்.
    கடந்த வருடம் எமது பிரதேசத்தின் விளையாட்டிற்கு தன்னை அர்ப்பணம் செய்த வீரர்களையும் அட்டாளைச்சேனையில் அன்று முதல் இன்று வரை கடமை புரித்த விளையாட்டு உத்தியோகத்தர்களையும் விருது கௌரவித்து வரலாறு காணாத வெற்றியும் கண்டது .

    Reply : 0       0

    சிறாஜ் Friday, 23 December 2011 02:56 AM

    சரியாகச் சொன்னீர்கள் தம்பி சர்ஜூன். சும்மா இந்த பாட்சா போன்றோர் வெளக்கெண்ண போல கொமண்ட் பன்னுற சரி இல்லை. யாரோ எவரோ, உண்மை, நேர்மை, வெளிப்படைத்தன்மை வேனும்.

    Reply : 0       0

    சிறாஜ் Friday, 23 December 2011 03:01 AM

    besc, தம்பி பேப்பருக்கு நடக்காத சேவைக்கெல்லாம் யாரு போச் கொடுக்கிறார் என்று நல்லா தலையை கிறுக்கி வைத்து யோசியுங்கள். சொந்தமா செலவு செய்து செய்தி சிலரின் வருது. அரசாங்கம் ஊரான் கொடுக்கும் வேலையிலும் மூக்கை நுளைத்து போஸ் கொடுப்பது உங்கட க.உ வும். க.அ வும்தான்.

    Reply : 0       0

    Nawas Friday, 23 December 2011 04:26 AM

    சர்ஜூன் அவர்களே... மேலேயுள்ள செய்தியில் யாரின் தலைமையிலும் அந்தச் சிரமதானம் நடந்ததாக எழுதப்படவில்லையே. என்ன மஸ்துல இருந்து கொண்டு செய்திய வாசிச்சிட்டிங்களோ.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .