2025 ஜூன் 25, புதன்கிழமை

அம்பாறை மாவட்டத்தில் கடும் காற்றுடன் கூடிய மழை

Kogilavani   / 2011 டிசெம்பர் 19 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல் அஸீஸ்)
அம்பாறை மாவட்டத்தின் பெரும்பாலான பிரதேசங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதனால் மீண்டும் வெள்ள அபாயம் தோன்றியுள்ளதுடன் குளிரான காலநிலை காணப்படுகின்றது.

இதேவேளை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் கடும் காற்றுடன் கூடிய மழை வீசிவருவதனால் பல குடியிருப்புக்களின் கூரைகளும்  சேதமடைந்துள்ளன.

இது தொடர்பாக அம்பாறை மாவட்ட வானிலை உத்தியோகத்தர் எம்.ஐ.ஏ.நஹீம் தெரிவிக்கையில்,

மழை தொடர்ந்து பெய்வதற்கான காலநிலை காணப்படுகின்ற அதேவேளையில் இன்றும், நாளையும் பலத்த காற்றுடன் கூடிய குளிரான காலநிலை காணப்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. இதேவேளை, கடல் கொந்தளிப்பாவும் காணப்படும் என்று அவர் தெரிவித்ததுடன் இது இது தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .