2025 ஜூன் 25, புதன்கிழமை

சுற்றாடல் மத்திய நிலையங்களை அமைக்கும் பணி துரிதம்

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 20 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான் )

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் சுற்றாடல் மத்திய நிலையங்களை அமைக்கும் நடவடிக்கையை கரையோர பாதுகாப்பு திணைக்களம் துரிதப்படுத்தியுள்ளது.

இந்த சுற்றாடல் மத்திய நிலையங்களினூடாக கடற்பரப்பிலும் மற்றும் கடற்கரையிலும் மீனவர்களின் கவலையீனம் காரணமாக  அழிந்துவரும் மீனினங்களையும்   கடல்வளங்களையும்  பாதுகாப்பது சம்பந்தமாக மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில்,  அறுகம்பை பிரதேசங்களில் மிக விரைவில் சுற்றாடல் மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக கரையோர பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் அனில் பிரேமரெட்ண தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .