2025 ஜூன் 25, புதன்கிழமை

பிரியாவிடை வைபவம்

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 21 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அட்டாளைச்சேனைப் பிரதேசசபையுடன் திண்மக்கழிவு முகாமைத்துவ நடவடிக்கையில் இணைந்து செயற்பட்ட யுனொப்ஸ் நிறுவனத்தின் அம்பாறை மாவட்ட உத்தியோகத்தர்கள் சிலர் தமது சேவையினை நிறைவு செய்வதையொட்டியும் இடமாற்றம் பெற்றுச் செல்வதையொட்டியும் அவர்களுக்கான பிரியாவிடை வைபவம் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேசசபையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த வைபவம் அட்டாளைச்சேனை லொயிட்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேசசபைத் தவிசாளர் ஏ.எல்.எம்.நசீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யுனொப்ஸ் நிறுவனத்தின் அம்பாறை மாவட்ட அலுவலகத்தின் நிதி ஆலோசகர் ஹேமந்த சடா, நிறுவன மேம்பாட்டு முகாமையாளர் காமினி சூபசிங்க ஆகியோருக்கு பிரியாவிடையளிக்கப்பட்டு பொன்னாடை போர்த்தியும்  நினைவுச்சின்னம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.

இதேவேளை, நிகழ்வில் கலந்துகொண்ட அம்பாறை மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜெ.எம்.இர்ஷாட் மற்றும் யுனொப்ஸ் நிறுவனத்தின் ஏனைய அதிகாரிகளும்; நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அட்டாளைச்சேனை பிரதேசசபை உறுப்பினர்களான எஸ்.எல்.முனாஸ், ஏ.எல்.அமானுல்லா, என்.எல்.யாசிர் ஐமன், ஏ.எல்.சுபைதீன் மௌலவி, பிரதேசசபையின் செயலாளர் எம்.எச்.முகமட் அமீர், பிரதேசசபை உள்ளூராட்சி உதவியாளர் ஏ.எல்.எம்.சாபீர், அபிவிருத்திக்குழு உறுப்பினர் ஐ.எல்.பஜுறுத்தின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 


You May Also Like

  Comments - 0

  • சிறாஜ் Thursday, 22 December 2011 04:36 AM

    நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே
    நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
    நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே
    நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
    என் உள்ளம் எனை பார்த்து கேலி செய்யும் போது
    இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது
    இது கணவன் சொன்னது.. இதில் அர்த்தம் உள்ளது

    Reply : 0       0

    pasha Thursday, 22 December 2011 09:38 PM

    அட்டாளைச்சேனை திண்மக்கழிவுகளை அகற்றியமைக்கு நன்றி. இனிவரும் காலங்களில் இவர்கள் செய்த சேவையை பிரதேச சபை தொடரும் என நம்புவோமாக.

    Reply : 0       0

    ஹமீட் Sunday, 25 December 2011 03:19 PM

    சிறாஜ் என்ன தத்துவமான பாடல் எல்லாம் பாடுறிங்க. ஆனால் உங்கட சபை என்ன செய்து என்று சொல்லுங்களேன்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .