2025 ஜூன் 25, புதன்கிழமை

வருடாந்த ஒன்றுகூடல்

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 22 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

வேர்ல்ட்விஷன் நிறுவனத்துடன் இணைந்து செயலாற்றுகின்ற  நாவிதன்வெளி பிராந்திய சிறுவர் கழகங்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த சிறுவர் ஒன்றுகூடலின் இறுதிநாள் ஒன்றுகூடல் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

சொறிக்கல்முனை ஹொலிகுரோஸ் வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் சாளம்பைக்கேணி மிஃறாஜ் சனசமூக அமைப்பின் தலைவர் எம்.ஐ.அஸீஸ் தலைமையில் இந்த ஒன்றுகூடல் நடைபெற்றது.

வேர்ல்ட்விஷன் நிறுவனத்தின் நாவிதன்வெளி பிராந்திய அபிவிருத்தித்திட்ட முகாமையாளர் அன்ரனி சுரேஸ், சிறுவர் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் கல்முனை பிராந்திய அலகு பொறுப்பதிகாரி ஏ.உதுமாலெப்பை, நாவிதன்வெளி பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் எஸ்.சிவகுமார், மௌலவி ஏ.எல்.காலிதீன் உட்பட சமூக மட்ட குழு அங்கத்தவர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.          

இதில் மத்திய முகாம் - 02 ராஜகிரீடம் சிறுவர் கழகம், சாளம்பைக்கேணி - 05 மிஃறாஜ் சிறுவர் கழகம், சொறிக்கல்முனை - 02 பாரதி சிறுவர் கழகம் என்பனவற்றின்  அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்

சிறுவர்களின் குழுப்பாடல், பேச்சு, கவிதை, நாடகம் என்பனவும் இந்நிகழ்வில் இடம்பெற்றன.  இறுதியில் நத்தார் தாத்தா கலந்துகொண்டு சிறுவர்களுக்கு இனிப்புப் பண்டங்களை வழங்கினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .