2025 ஜூன் 25, புதன்கிழமை

வெளிவலயங்களுக்கு இடமாற்றப்பட்ட ஆசிரியர்கள் கல்முனை வலயத்தில் பணியாற்ற அங்கீகாரம்

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 23 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரமன்)

கல்முனை வலயத்திலிருந்து 2009ஆம் ஆண்டு இறுதியில் வெளிவலயங்களுக்கு இடமாற்றப்பட்ட 110 ஆசிரியர்கள் இரண்டு வருட சேவையை நிறைவு செய்ததை தொடர்ந்து 1.1.2012ஆம் ஆண்டு முதல் மீண்டும் கல்முனை வலயத்திற்கு இடமாற்றப்படுவதற்கு கிழக்கு மாகாண அமைச்சரவை நேற்று வியாழக்கிழமை அங்கீகாரமளித்துள்ளது.

1.1.2010ஆம் ஆண்டு கல்முனை வலயத்திலிருந்து மேலதிக ஆசிரியர்களென்ற அடிப்படையில் மேற்படி 110 ஆசிரியர்களும் அக்கரைப்பற்று, சம்மாந்துறை, பட்டிருப்பு, திருக்கோவில், மட்டக்களப்பு மத்தி ஆகிய வெளிவலயங்களுக்கு இரண்டு வருடங்களுக்கு இடமாற்றப்பட்டிருந்தனர். இவ் இரண்டு வருடங்கள் நிறைவுற்றதும் மீண்டும் இவர்கள் கல்முனை வலயத்திற்கு இடமாற்றம் பெறமுடியுமென கிழக்கு மாகாண கல்வி அமைச்சு செயலாளரின் எழுத்துமூல நிபந்தனையுடன் இடமாற்றப்பட்டனர்.
இருப்பினும் இவ் இரண்டு வருடங்கள் முடிந்த நிலையிலும் இவ் ஆசிரியர்கள் கல்முனை வலயத்திற்கு இடமாற்றப்படவில்லை.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சருக்கு செய்த எழுத்துமூல முறைப்பாட்டையடுத்து அமைச்சரவை மேற்படி விசேட தீர்மானத்தை மேற்கொண்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள்  சந்திப்பில் நேற்று கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .