2025 ஜூன் 25, புதன்கிழமை

ஆலயடிவேம்பில் கறவை மாடுகள் பகிர்ந்தளிப்பு

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 23 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

பொருளாதார அபிவிருத்தி அமைச்சினூடாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த 13 குடும்பங்களுக்கு கறவை மாடுகளைப் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு இன்று ஆலயடிவேம்பில் இடம்பெற்றது.

ஆலயடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பயனாளிகளிடம் - கறவை மாடுகளுக்கான பத்திரங்களை வழங்கி வைத்தார்.

சுமார் 39 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கன்றுடன் கூடிய கறவைப் பசு – தலா ஒவ்வொரு பயனாளிக்கும் வழங்கப்பட்டன. மேற்படி 39 ஆயிரம் ரூபாவில் 50 வீதம் பயனாளிகளுக்கு மானியமாக வழங்கப்படும் அதேவேளை, மிகுதி 50 வீதத்தினை தவணை முறையில் செலுத்த வேண்டும் என்பது நிபந்தனையாகும்.

கறவை மாடுகளை வழங்கும் இந்நிகழ்வில், ஆலயடிவேம்பு மிருக வைத்திய அதிகாரி திருமதி விஜயரட்ணம், சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் எஸ்.எம்.நேசராஜா, நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் எஸ்.ஜெயசங்கர், உதவி நிகழ்ச்சித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி பி.கிருபராஜா, சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகளின் குடும்பத்தார் என பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .