2025 ஜூன் 25, புதன்கிழமை

வீதியில் வெள்ளம்...

Super User   / 2011 டிசெம்பர் 24 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது பெய்து வரும் அடை மழை காரணமாக, கல்முனை – நாவிதன்வெளி பிரதேசங்களை இணைக்கும் கிட்டங்கி பாலத்துடனான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால், பாதசாரிகள் கடும் சிரமங்களுக்கு மத்தியில் பாதையைக் கடந்து செல்கின்றனர்.

எனினும், மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி போன்ற வாகனங்கள் வெள்ளத்தினூடாகப் பயணம் செய்ய முடியாத நிலைமை காணப்படுகின்றமையினால் பலர் பயணம் செய்ய முடியாமல் திரும்பிச் செல்வதை அவதானிக்க முடிந்தது.

கல்முனை பிரதேசத்தினையும் - நாவிதன்வெளி பிரதேச செலகப் பிரதேசங்களையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ள கிட்டங்கிப் பாலம் மற்றும் வீதியினூடாக – கொலனி, உகனை, மத்திய முகாம் மற்றும் மண்டூர் போன்ற பிரதேசங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருவது வழமையாகும்.

ஏற்கனவே, குறித்த வீதியை மாரி காலத்துக்கு முன்னர் புனரமைக்குமாறு ஊடகங்கள் மூலம் மக்கள் கோரிக்கை விடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் அடை மழை காரணமாக, பாண்டிருப்பு மேட்டுவட்டைக் கண்டத்திலுள்ள சுனாமி வீட்டுத் தொகுதியிலுள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதனால் குறித்த வீட்டு திட்டத்தில் குடியிருந்த 65 குடும்பங்கள்  இடம்பெயர்ந்துள்ளன. (ஹனீக் அஹமட், அப்துல் அஸீஸ்)


                                                                                                                                                                  


You May Also Like

  Comments - 0

  • kuman Monday, 26 December 2011 10:04 PM

    when our leader (s) going to open their eyes ???? at least before next monsoon rainy seasons.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .