2025 ஜூன் 25, புதன்கிழமை

நித்தவூர் பிரதேச சபை தவிசாளருக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிராக வாக்களித

Super User   / 2011 டிசெம்பர் 24 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நித்தவூர் பிரதேச சபை தவிசாளருக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே ஆளும் கட்சி உறுப்பினர்கள் இருவர் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்டுப்பாட்டிலுள்ள நித்தவூர் பிரதேச சபையின் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக அக்கட்சியின் உறுப்பினர்கள் இருவர் எதிராக வாக்களித்தமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நிந்தவூர் பிரதேச சபை தவிசாளரினால் அதிகார துஷ்பிரயோகங்களை மேற்கொண்டு வருகின்றார். இதன் ஒரு அங்கமாகவே, பிரதேச சபை உறுப்பினர்களினால் பிரதேச சபையின் அதிகாரிகளிடம் கேட்கப்படும் கேளிவிகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என உத்தரவிட்டுள்ளார்.

சட்டத்தின்படி பிரதேச சபையின் உப தவிசாளருக்கு உரிய அந்தஸ்து வழங்க வேண்டிய அவசியமில்லை. எனினும் சம்பிரதாயபூர்வ படி அனைத்து பிரதேச சபைகளிலும் உப தவிசாளருக்கு உரிய அந்தஸ்து வழங்கப்படுகின்றது.

எனினும், நிந்தவூர் பிரதேச சபையின் உப தவிசாளருக்கு மாத்திரம் உரிய அந்தஸ்து வழங்க தவிசாளர் மறுக்கிறார்.
கட்சி தலைமைத்துவத்தினால் வழங்கப்படும் ஏற்றுக்கொள்ளும் தவிசாளர், நிந்தவூர் வந்தவுடன் அதனை நிறைவேற்றாமல் கிடப்பில் போதுகிறார்.

நான் பணத்தின் மூலம் எமது கட்சியின் பொது செயலாளர் ஹசன் அலி தலைவர் போட்ட பிச்சையிலும் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டதாக நித்தவூர் பிரதேச சபையின் வரவு செலவு திட்ட விவாதத்தில் தெரிவித்துள்ளார்.

எங்கள் இருவர் தொடர்பில் கருத்து தெரிவிக்க முன்னர், நித்தவூர் பிரதேச சபை தவிசாளருக்கு எவ்வாறு பணம் வந்தது என்பதை யோசித்து பார்ப்பதுடன் தனது கடந்த கால வரலாற்றை திரும்பி பார்க்க வேண்டும்.


You May Also Like

  Comments - 0

  • meenavan Saturday, 24 December 2011 11:05 PM

    கொந்தராத்து விடய பகிர்வுகளின் சமநின்மை, ஆளும் கட்சி உருப்பினர்களினிடையே குளறுபடியோ?

    Reply : 0       0

    ameen Sunday, 25 December 2011 05:01 AM

    அப்ப என்ன எலக்சன் கேட்டு வென்றா வந்தார்?

    Reply : 0       0

    janoovar Sunday, 25 December 2011 05:22 AM

    நீங்கள் போட்டவர் தவிசாளராக வராததால் எதிர்த்து வாக்களித்தனர். தவிசாளருக்கு அவ்விருவராலும் எந்த அழுத்தமும் கொடுக்க முடியாது அவ்வளவுக்கு உங்களுக்கு அதிகாரம் இல்லை.

    Reply : 0       0

    ஹமீட் Sunday, 25 December 2011 03:17 PM

    தம்பி ஜனூபர், நீ சின்னப்பையன் சும்மா அது இது எல்லாம் சொல்லக்கூடாது. சரியா வீட்ட போய் சும்மா இரு. அந்த க.உ. வக்காளத்து வாங்கிட்டு அவர் தந்த தொழிலை செய்திட்டு சும்மா இருக்கனும். வம்புக்கு போக வேண்டாம் சரியா...

    Reply : 0       0

    NINTHAVURAAN FS Sunday, 25 December 2011 06:14 PM

    ஊருக்கு சேவை செய்யா விட்டாலும் பரவா இல்லை தயவு செய்து ஊரின் பேரைக் கெடுக்காதிங்க......

    Reply : 0       0

    -ninthavur Monday, 26 December 2011 05:40 PM

    முடிஞ்சால் நெஞ்சில் குத்தனும் முதுகுல குத்துறது கோழைத்தனம்.

    Reply : 0       0

    citizen Monday, 26 December 2011 07:22 PM

    உதவி செய்யாட்டிலும் உபத்திரமாவது செய்யாமலிருக்ககலாமல்லவா?

    Reply : 0       0

    vaasahan Tuesday, 27 December 2011 03:56 AM

    அங்கு தன் கட்சியும் மாற்றான் கட்சியும் தெரியாத நிறைய ஆட்கள் உள்ளனர். சென்ற பாராளுமன்ற தேர்தலில் அம்மையாருக்கு பக்கபலமாக இருந்த அதிகாரிகள் சிலர் அண்ணன் தம்பி மார்களால் அக்கிராசனம் ஏறப்பட்டனர். அவர்கள் செய்த தில்லுமுல்லுகளை எதிர்த்த பொதுமக்கள் சில ஊடக ரிப்போர்டர்களால் பிரதேசவாதிகளாக கூறப்பட்டனர். ஆனால் சில நாட்களின் பின் அதே தவறு வேறு அதிகாரி ஒருவரால் செய்யப்பட இன்று பூதாகாரமாக பேசப்படுகிறது.

    Reply : 0       0

    Doc - KSA Tuesday, 27 December 2011 08:05 AM

    Don't you feel shame Hon. FC? Beeing a muslim, at least serve those who elected rather then criticize.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .