2025 ஜூன் 25, புதன்கிழமை

இலவச மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2011 டிசெம்பர் 25 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

கண்பார்வை குறைந்தவர்களுக்கான இலவச கண்பரிசோதனையும் மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

கல்முனை அவ்றோ ஜூவலரியின் அனுசரனையுடன் கல்முனை மெத்தா சமாஜய ஏற்பாட்டில்;  அமைப்பின் இணைப்பாளர் எம்.ஐ.எல்.ஜமால் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் அவ்றோ ஜூவலரியின் அதிபர் எஸ்.எம்.பர்வீஸ் அமீர், சாய்ந்தமருது, நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களின் மெத்தா சமாஜய அமைப்பின் தலைவர்களான எம்.றோஸான், எம்.ஐ.எம்.ஹரீஸ், மகாநுவர ஒப்டிகல்ஸ் நிறுவனத்தின் வைத்திய அதிகாரி நிமால் வீரக்கோண் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, பலருக்கு கண்பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இலவவமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .