2025 ஜூன் 25, புதன்கிழமை

மருதமுனை வீடொன்றில் தங்கநகைகள் திருட்டு

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 25 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸிஸ்)

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை அல்மனார் வீதியிலுள்ள  வீடொன்றில் 40 பவுன் தங்கநகைகள் திருடப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸில் நேற்று சனிக்கிழமை இரவு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த  வீட்டு உரிமையாளர்கள் வெளியில் சென்றிருந்த வேளையில் கூரையினூடாக வீட்டிற்குள் நுழைந்த திருடர்கள் 40 பவுன் தங்கநகைகளை திருடிச்சென்றுள்ளதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த திருட்டுச் சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றது.

கல்முனை கல்வி வலய ஆலோசகர் எம்.ஏ.இனாமுல்லா என்பவரின் வீட்டிலேயே இத்திருட்டு இடம்பெற்றது.

இத்திருட்டுச் சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .