2025 ஜூன் 25, புதன்கிழமை

சம்புக்களப்பு வடிச்சல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் அங்குரார்ப்பணம்

Super User   / 2011 டிசெம்பர் 25 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

அட்டாளைச்சேனை,  சம்புக்களப்பு வடிச்சல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று சனிக்கிழமை அட்டாளைச்சேனை பாவங்காய் வீதியில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண நீர்ப்பாசனம் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா கலந்துகொண்டார்.

இத்திட்டத்தின் மூலம் அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச விவசாயிகள் நன்மையடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • janoovar Monday, 26 December 2011 02:14 AM

    இப்படியான பாரிய அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளும் அமைச்சர் இருவரையும் இவ்ஊர் மக்கள் மறப்பது நன்றியற்ற தன்மையாகும். அமைச்சர் இருவருக்கும் எமது இளைஞர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    சிறாஜ் Monday, 26 December 2011 05:11 AM

    இந்த கல்லு வைப்பதிலும் பெயர் வைப்பதிலும் மிக பெரிய பங்கு உங்க இரண்டு பேருக்கும் வேறு என்னதான் நடக்குது. மக்களுக்கு தேவை அவர்களின் குடியிருப்பில் சேவை இது என்னமோ நடக்குது.

    Reply : 0       0

    Nawas Monday, 26 December 2011 03:04 PM

    ஊருக்குள்ள இவர்கள் நாட்டிய நினைவுக் கல்லுகளை வைத்தே ஒரு கட்டிடம் கட்டலாம்! தாங்க முடியலடா சாமி!!

    Reply : 0       0

    AHAMED JUNAID Monday, 26 December 2011 03:14 PM

    மாவடிப்பள்ளி --காரைதிவு இடையிலுள்ள வெள்ளத்தில் அடிக்கடி மூழ்கும் சின்னபாலதையும் கண்திறந்து பாருங்கள். மழைகாலத்தில் மக்கள் கடும்கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள.

    Reply : 0       0

    minwar Monday, 26 December 2011 03:54 PM

    இப்படி களப்புகளில் மண்ணைத் தோண்டியெடுப்பதிலும், வீதிகளுக்கு மண் போட்டு நிரப்புவதிலும் - சுளையாக உழைக்கவும் முடியும்.

    Reply : 0       0

    minwar Monday, 26 December 2011 03:58 PM

    அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்டு, ஒரு உறுப்பினராகவும் வர முடியாமல், மக்கள் புறக்கணித்த அதிபர் திலகம் சைபுத்தீன் அவர்களை அட்டாளைச்சேனை அபிவிருத்திக் குழுவின் தலைவராக நியமித்த அமைச்சரின் ஜனநாயம் வாழ்க.... (புகைப்படத்தில் அதிபர் திலகமும் போஸ் கொடுப்பதால்தான் இந்தக் கதையைச் சொல்கிறேன்)

    ஏன், அட்டாளைச்சேனைப் பிரதேச சபைக்குத் தெரிவாகியுள்ள சகோதரர் ஆப்தீன் அவர்களை அபிவிருத்திக் குழுத் தலைவராக்கினால் என்ன? அதுதானே ஜனநாயகம்.

    Reply : 0       0

    Gille Monday, 26 December 2011 06:10 PM

    இது எல்லாம் நாடகம் கண்துடைப்பு.

    Reply : 0       0

    thala Tuesday, 27 December 2011 12:37 AM

    சிராஜ்... வைக்கோல் கண்தில் நாய் படுத்தால் என்ன செய்யும் தெரியுமா ? அதே நிலைதான் நீங்களும்...........

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .