2025 ஜூன் 25, புதன்கிழமை

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் பாவனைக்குதவாத தளபாடங்கள் செப்பனிடப்பட்டு அதிபரிடம் கையளிப்பு

Kogilavani   / 2011 டிசெம்பர் 26 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் யங் லயன்ஸ் விளையாட்டுக் கழகத்தினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட சிரமதான நடவடிக்கையொன்றின்போது, பாவனைக்குதவாமல் கிடந்த 200க்கும் அதிகமான கதிரை, மேசைகள் செப்பனிடப்பட்டு பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டன.

அட்டாளைச்சேனை யங் லயன்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவரும் பொலிஸ் பரிசோதகருமான ஏ.எம்.எம். நஜீப் தலைமையில் 'மாபெரும் சிரமதான நிகழ்வும், டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டமும்' நேற்று அறபா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இதன்போது, பாடசாலையும் அதன் சுற்றுப் புறச் சூழலும் அழகுபடுத்தப்பட்டதோடு, டெங்கு பெருகும் இடங்கள் இனங்காணப்பட்டு அழிக்கப்பட்டன.

இதேவேளை, இச்சிரமதானத்தின் போது, பாடசாலையிலுள்ள சில உள்கட்டமைப்பு வசதிகளும் ஒழுங்கமைத்துக் கொடுக்கப்பட்டன.

மேற்படி நடவடிக்கையின்போது, அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் மௌலவி ஏ.எல்.எம். காசிம், அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல்.எம். நசீர், அட்டாளைச்சேனை கோட்டக்கல்வி அதிகாரி என்.கே.எம். இப்றாகிம், பாடசாலை அதிபர் ஏ.எல். கிதுறு முஹம்மட், ஜனாதிபதி புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர் எம்.எம். கால்தீன், வெளிநாட்டு அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ. நஜீட் அஹமட், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.    

                 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .