2025 ஜூன் 25, புதன்கிழமை

கல்முனை பிரதேச செயலகத்தில் காணிக் கச்சேரி விசாரணை ஆரம்பம்

Super User   / 2011 டிசெம்பர் 26 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

காணிக்  கச்சேரி விசாரணை நடவடிக்கை இன்று திங்கட்கிழமை கல்முனை  பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் தலைமையில் நடைபெற்ற இந்த விசாரணை நடவடிக்கையில் இதுவரை கிடைக்கப்பெற்ற சுமார் 900 விண்ணப்பங்களுக்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த விசாரணை நடவடிக்கை டிசம்பர் 30ஆம் திகதி வரை கல்முனை  பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காணியற்றோர்களுக்கு காணி வழங்குவதற்காக, அரச காணிகளில் உரிய ஆவணங்களின்றி குடியிறுப்போருக்கு உரிய உத்தரவு வழங்கள் போன்ற செயற்பாடுகளுக்காகவே காணிக் கச்சேரி விசாரணை இடம்பெறுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .