2025 ஜூன் 25, புதன்கிழமை

திருக்கோவில் கடற்கரையில் சடலம் மீட்பு

Super User   / 2011 டிசெம்பர் 26 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

மட்டக்களப்பு கூட்டுறவு சங்க பரிசோதகர் திருக்கோவில் பிரதேச கடற்கரையில் இன்று திங்கட்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஈ.பி.சமிந்த ஜெயசூரியா தெரிவித்தார்.

திருக்கோவில் பிரதேசத்தில் சுனாமி அனர்த்ததினால் கடந்த 2004ஆம் ஆண்டு உயிரிழ்த உறவினரின் 7ம் ஆண்டு நினைவு தினத்திற்காக திருக்கோவில் பிரதேசத்திற்கு குடும்பத்தினருடன் வந்துள்ளார்.

சம்பவ தினமான இன்று அதிகாலை 4.30 மணியளவில் மலசலம் கழிப்பதற்காக கடற்கரைக்கு சென்ற வரை நீண்ட நேரமாக காணவில்லை என உறவினர்கள் தேடிய போது கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மட்டக்களப்பு கூட்டுறவு சங்க பரிசோதகரான திருக்கோவில் மத்திய மகா வித்தியாய வீதியைச் சேர்ந்த வேல்முருகு மகோந்திரராஜா (வயது – 51) என்பவராவார்.

இவருக்கு வலிப்பு நோய் இருப்பதாகவும் சம்பவத்தின் போது வலிப்பு ஏற்பட்டு கடலில்  மயங்கி வீழ்ந்தமையினால்  உயிரிழந்துள்ளதாக பொலிஸரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சடலம் பிரோத பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0

  • Thankarasa Tuesday, 27 December 2011 02:36 AM

    பரிதாபம் ..........

    Reply : 0       0

    sutha Tuesday, 27 December 2011 04:22 PM

    பாவம். கண்ணீர் அஞ்சலி.

    Reply : 0       0

    Birdeye Tuesday, 27 December 2011 09:34 PM

    அன்னாரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

    Reply : 0       0

    Thamseen Ilm Thursday, 29 December 2011 10:35 PM

    அன்னாரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்....!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .