2025 ஜூன் 25, புதன்கிழமை

சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு இரத்ததான நிகழ்வு

Kogilavani   / 2011 டிசெம்பர் 27 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)
திருக்கோவில் பிரதேசத்தில் சுனாமி ஞாபகார்த்த தினத்தையிட்டு பிரதேச றேஞ்சர்ஸ் கிளப் கல்விப்பிரிவு ஏற்பாடு செய்த இரத்ததானம் வழங்கும் நிகழ்வு தம்பிலுவில் மதியமகா வித்தியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

 

இதன்மூலம் பெறப்பட்ட இரத்தம் கல்முனை ஆதார வைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்தவங்கி பிரிவுகளுக்கு வழங்கப்பட்டது.

றேஞ்சர்ஸ் கிளப் தலைவர் சோ.சேந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,  திருக்கோவில் பிரதேச சுகாதார திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் திருமதி சுலோச்சனா ராஜேந்திரா, கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட விரிவுரையாளர் வைத்தியர் அருளானந்தம், கல்முனை ஆதார வைத்தியசாலை இரத்தவங்கி பிரிவு பணிப்பாளர் வைத்தியர் எம்.ஜ.சிறாஜ்,வைத்தியர் யாமினி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேவேளை  இவ் இரத்ததானம் வழங்கும் நிகழ்வில் பிரதேச இளைஞர்கள், பாதுகாப்பு படையினர்  மற்றும் பொதுமக்கள் உட்பட 80இற்கும் பேருக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .