Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Super User / 2011 டிசெம்பர் 28 , பி.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
'அக்கரைப்பற்றின் வீதி அபிவிருத்திக்கென அரசாங்கத்தினால் 'கமநெகும' திட்டத்தின் ஊடாக கடந்த 03 வருடங்களில் மட்டும் ஏறக்குறைய 08 கோடி ரூபாய்கள் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதியானது வீதிகளுக்காகச் செலவு செய்யப்பட்டுள்ளதாகக் கணக்கு முடிக்கப்பட்டுள்ள போதும், இப்பிரதேசத்திலுள்ள எந்தவொரு உள் வீதியிலும் பயணிக்க முடியாத துர்ப்பாக்கிய நிலையே காணப்படுகிறது.
அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்ட இங்குள்ள அரசியல்வாதிகள் - அரச நிதியைப் பயன்படுத்தி இவ் வீதிகளை தாமும் செப்பனிடுவதில்லை, அடுத்தவரையும் அனுமதிப்பதில்லை' என அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், மார்க்க அறிஞருமான அஷ்ஷேய்க் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி தெரிவித்துள்ளார்.
அக்கரைப்பற்று மாநகர சபையின் 2012ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட பிரேரணையினை புறக்கணித்து நேற்று செவ்வாய்கிழமை சபையிலிருந்து வெளிநடப்பு செய்ததன் பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் ஹனீபா மதனி விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அக்கரைப்பற்று மாநகர சபையானது - யானை தின்ற விளாங்காய் போல் காட்சியளிக்கின்றது. அக்கரைப்பற்று மாநகரத்தின் பிரதான வீதி மட்டும் தடல்புடலாகக் காணப்பட்டாலும், இந் நகரிலுள்ள உள் வீதிகளின் நிலையோ பரிதாபகரமானதாகும். இந்த வீதிகளில் மக்கள் பயணம் செய்வதில் அளவுக்கதிகமான சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
அக்கரைப்பற்றின் வீதி அபிவிருத்திக்கென அரசாங்கத்தினால் 'கமநெகும' திட்டத்தின் ஊடாக கடந்த 03 வருடங்களில் மட்டும் ஏறக்குறைய 08 கோடி ரூபாய்கள் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியானது வீதி அபிவிருத்திகளுக்குச் செலவு செய்யப்பட்டுள்ளதாகக் கணக்கு முடிக்கப்பட்டுள்ள போதும், இப் பிரதேசத்திலுள்ள எந்தவொரு உள் வீதியிலும் பயணிக்க முடியாத துர்ப்பாக்கிய நிலையே காணப்படுகிறது. அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்ட இங்குள்ள அரசியல்வாதிகள் - அரச நிதியைப் பயன்படுத்தி இவ் வீதிகளை தாமும் செப்பனிடுவதில்லை, அடுத்தவரையும் அனுமதிப்பதில்லை!
அக்கரைப்பற்றில் வடிகான்கள் அமைக்கப்பட்டு, வெள்ள நீரை வடிய வைப்பது முக்கியமாகும் என்று பல்வேறு தடவைகள் கூறியுள்ளோம். நீர் வடிந்தோடும் நீரினைத் தேக்கி வைத்துக்கொள்ளும் நீர் நிலைகளை மண்போட்டு நிரப்பும் வேலைகளைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளன. ஆனாலும், துரதிஷ்டவசமாக அக்கரைப்பற்று மாநகர சபையிலுள்ள சில அங்கத்தவரகள் - நீர் நிலைகளை மண்ணிட்டு நிரப்பும் ஒப்பந்த வேலைகளை மறைமுகமாக மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், மாநகர சபையில் பேசப்படுகின்ற விடயங்கள் கணக்கில் எடுக்கப்படுவதேயில்லை!
அக்கரைப்பற்றுப் பிரதேசம் - கடந்த காலங்களில் கல்வியில் கொடிகட்டிப் பறந்தது. வருடா வருடம் இங்குள்ள பாடசாலைகளிலிருந்து மாணவர்கள் பல்கலைக் கழகங்களின் விஞ்ஞான, பொறியில், வைத்திய பீடங்களுக் தெரிவாகினர். ஆனால், அண்மைக்கால அரசியல் நடவடிக்கைகள் கல்விக் களஞ்சியமாக இருந்த இம் மண்ணை மாறுபட்ட சூழலுக்கு மாற்றி விட்டது. தற்போது அக்கரைப்பற்றில் வைத்திய, பொறியில் பீடங்களுக்கு மாணவர்கள் தெரிவாவது எட்டாக் கனியாகி விடுமோ என அச்சப்படும் நிலையொன்று தோன்றியுள்ளது.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற அக்கரைப்பற்றுப் பிரதேசத்தின் மாநகர சபையில் இஸ்லாமிய சமயத்தையோ, கலாசார விழுமியங்களையோ சிலாகித்து உரையாற்றுகின்ற வேளைகளில் குறுக்கீடுகள் இடம்பெறுகின்றன. இஸ்லாம் வேறு அரசியல் வேறு என்கிறார்கள். இஸ்லாம் பற்றி பள்ளிவாசல்களில் பேசிக் கொள்ளுங்கள் - இந்த சபையில் அரசியலை மட்டுமே பேசுங்கள் என்று என்னிடம் கூறப்படுகிறது.
'இஸ்லாம் வேறு அரசியல் வேறு' என்று எக் காரணத்தை முன்னிறுத்தியும் வாதிட முடியாது. சமகால இஸ்லாமிய சிந்தனையாளர்களான யூசுப் கர்ளாவி, செய்யது குத்ப் போன்றோர் இதற்கென பல நூல்களையே எழுதியுள்ளனர். இஸ்லாத்திலிருந்து அரசியலை வேறுபடுத்துவது கிழக்கத்திய வாதிகளின் நச்சுத் தன்மையான நடவடிக்கையாகும். இதனை இந்தக் கூட்டத்தார் விளங்கிக் கொள்ளாமையானது கவலைக்குரியதாகும்.
அக்கரைப்பற்று மாநகர சபையினூடாக தொழில்களுக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெறும் போது, கடந்த காலங்களில் இந்தச் சபையின் கீழ் தொழில் செய்து – பின்னர் தொழிலை இழந்து நிற்பவர்களுக்கும், கல்வித் தகைமையும் ஒழுக்கமும் நிறைந்த இளைஞர்களும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்திருந்தோம். ஆனால், நியாயபூர்வமான இந்த வேண்டுகோளானது சற்றும் கவனத்திற் கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.
எனவே, இவ்வாறான விடயங்கள் தொடர்பில் அக்கரைப்பற்று மாநகரசபையையும், மக்களையும் கவனயீர்ப்புச் செய்வற்காகவும், இப்பிரதேசத்தின் கல்வியில் கவனம் செலுத்தப்படுதல் வேண்டும் என்பதை உரத்துச் சொல்லும் வகையிலும், வடிகான் அமைப்பு - வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவும் அக்கரைப்பற்று மாநகரசபையின் 2012 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டப் பிரேரணையினைப் புறக்கணித்து வெளி நடப்புச் செய்தேன்!
meenavan Thursday, 29 December 2011 04:42 AM
அஸ் ஷெய்க் ஹனிபா அவர்களே உங்கள் மாநகர சபையில் சமகால இஸ்லாமிய சிந்தனையாளர் யூசுப் கர்ளாவி போன்றோரின் நூல்களை விட, மக்கத்தாரின் நூல்களிலிருந்து மேற்கோள்களை குறிப்பிட்டிருந்தால் இடையுறு ஏட்பட்டிராது. நிர்வாண அரசியலில் நீங்கள் ஆடை அணிய நேரிட்டால் இப்படி நிகழ்வது சகஜமே.
Reply : 0 0
Nanavanillai Thursday, 29 December 2011 04:45 AM
அன்புள்ள எதிர்கட்சி தலைவர் அவர்களே
நீங்கள் சொல்லுவதுபோலே கல்விக்கு ஆப்பு வைத்தவர்கள் உங்கள் கட்சிக்காரர். தயவு செய்து உங்கள் மார்க்கப் பணியை தொடரவும்.
Reply : 0 0
vanndu Thursday, 29 December 2011 05:38 AM
ஹனிபா அவர்களே அரசியல் செய்யாமல் நீங்கள் பள்ளிவாசலில் பயான் செய்திரிந்தால் நிச்சயம் மக்கள் உங்களுக்கு தலை சாய்த்திருப்பார்கள்.
Reply : 0 0
siraj Thursday, 29 December 2011 05:47 AM
கண்ணியத்துக்குரிய உலமா மதனி அவர்களே சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள் ஊரின் நிலை எங்கோ போகுது என்று புரியவில்லை. சாடிக்கு ஏற்ற மூடி என்பதனால் இரண்டுமே சரியாக பிடித்து விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் முக்கிக்கொண்டு இருப்பதனைப் பார்க்கும்போது கவலையாகவும் ஆத்திரமாகவும் இருக்கிறது.
Reply : 0 0
vaan moli Thursday, 29 December 2011 12:34 PM
அடுத்த தேர்தல் காற்றில் நிச்சயம் சருகுகள் கூட்டித்தள்ளப்படும். மரம் மட்டும் ஓங்கி நிற்கும்.
Reply : 0 0
suresh Thursday, 29 December 2011 01:43 PM
மறுபடியும் ஒரு பக்க கருத்துக்களையும் செய்திகளையும் வெளியிடும் கட்டுரையாளருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் வாழ்த்துக்கள். பேசாம நீங்க அவங்க பொது உறவு உத்தியோகத்தரா பதவி எடுத்துகோங்கோ அதுதான் நல்லது சமூகத்துக்கு.
Reply : 0 0
ummpa Thursday, 29 December 2011 02:08 PM
நீங்கள் சொல்லிவிட்டீர்கள். அதுவே ஆதாரமாக இருக்கும். இவை நாட்டின் பெரியவரிடம் கடிதமாக அனுப்பப்பட்டு அதக்கான நடவடிக்கை மிகவும் விரைவில் எடுக்கப்படும் என தெரியப்படுகின்றது. எனவே கொஞ்சம் பொறுத்து இருந்து பார்போம். இல்லாவிட்டால் இந்தியாவில் ஹசாரே மாதரி லோக்பால் மசோதா இலங்கை பாராளுமன்றத்திலும் தாக்கல் செய்தால் மிகவும் நன்றாக இருக்கும் அப்பத்தான் களவு எடுக்கும் கள்ளர்கள் ஒளிந்துவிடுவார்கள் சேவை மனப்பங்கானவர்கள் முன்வருவார்கள்.
Reply : 0 0
A.L.A.ALI Thursday, 29 December 2011 08:19 PM
மதனி மௌலவி அவர்களே, நீங்கள் உண்மையான மக்கள் சேவகன், மக்களுக்கு சேவை செய்வதில் உங்கள் பதவி தடையாக இருந்தால் அதனை தூக்கி எறிந்து விடுங்கள். பள்ளி வாசல்களில் இருந்து உங்கள் சேவை பணியை மீண்டும் ஆரம்பியுங்கள்.
Reply : 0 0
janoovar Thursday, 29 December 2011 08:38 PM
மதனி அவர்களே ஏன் இவைகலெல்லாம் நடக்கும் மாநகர சபையில் உறுப்பினராக இருக்கின்றீர்கள். உங்கள் கருத்து பதவியை ராஜினமா பன்னிவிட்டு கூறி இருந்தால் கேட்டிருப்போம். உங்களுக்கு ஏன் இந்த அரசியல் ஆசை.
Reply : 0 0
Akp Makan Thursday, 29 December 2011 08:41 PM
தம்பி வாண்டு , நானவனில்லை நீங்கள் நல்லது செய்பவர்களை செய்ய விட வேண்டும் அல்லது நீங்கள் செய்ய வேண்டும். ஹனிபா மதனி கதைப்பது உங்களுக்கும் சேர்த்துதான். உங்களின் உம்மா வாப்பா, சகோதரன், சகோதரி, பிள்ளைகள், வயது வந்தோர், நோயாளிகள், சிறுவர்கள், உங்கள் நண்பர்கள் நடப்பது இந்த பாதையில் தான் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். நீங்கள் செல்லும் பாதையில் ஒரு சிறு கல்லை கண்டாலும் அதை அகற்றிவிடுங்கள் என்று சொல்லும் இஸ்லாம் எங்கே, நீங்களும் உங்கள் தலைவர்களும் எதை நோக்கி பயணம் செய்கிறீர்கள் என்பதை அல்லா அறிவான்.
Reply : 0 0
Nawas Friday, 30 December 2011 12:24 AM
தம்பி suresh, இதுல என்னடா மக்காள் ஒரு பக்கக் கருத்து இருக்கு? அவரு வெளிநடப்புச் செய்ததுக்கான காரணத்தைச் சொல்லியிருக்காரு, அதை நிருபர் எழுதியிருக்காரு. முதல்ல கட்டுரைக்கும் செய்திக்கும் வித்தியாசம் விளங்கிக்கப்பா. இதை எழுதியிருப்பவரைக் கட்டுரையாளர் என்று சொல்வதில்லை.
எதுவே விளங்காத நீயெல்லாம் கருத்துச் சொல்லிருப்பதை நினைக்கக்க புல்லரிக்குதடா மக்காள்!
திரும்பத் திரும்ப சொல்றன், ஆறு அறுக்கேக்க, .......டுக்கு அறுக்காதேயடா!!
Reply : 0 0
siraj Friday, 30 December 2011 04:20 AM
மதனியின் சரியான கூற்றை செய்தியாளர் இங்கு சிறப்பாக கூறியிருக்கிறார். விளாங்காய் விழுங்கிய சிலர் தப்பாகப்பேசுவது எங்களுக்குப் புரியுது அக்கரைப்பற்றில் நடக்கும் அட்டூளியத்துக்கும் ஒரு எல்லை வேண்டுமே. எனவே வக்காளத்து வாங்கும் வங்குறோத்துக்காரர்களுக்கு இங்கு என்ன நடந்திருக்கு என்று விளங்காது.
Reply : 0 0
thala Friday, 30 December 2011 08:06 PM
தம்பி சிராஜ்., தற்போது ஏழாம் அறிவும் வந்துவிட்டது அதைப்பார்த்து நீங்களும் உங்கள் அறிவைப் பெரிக்கிவிட்டு வந்து COMMENTS பண்ணுங்கள். அப்பத்தான் உங்களுக்கும் என்ன சரி விளங்கும்.
Reply : 0 0
சிராஜ் Saturday, 31 December 2011 01:59 PM
தல thal aஎன்னும் தலை இல்லாத சிலர் இந்த பாளாப்போன சினிமாவைப் பார்த்துத்தான் எல்லா நடவடிக்கையும் மேற்கொள்கிறார்கள் என்று நினைக்கும் போது கேவலமாகவும் வெட்கமாகவும் இருக்கு முதல்ல படி பின்பு கடி....
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
26 minute ago
2 hours ago