2025 ஜூன் 25, புதன்கிழமை

சிவில் பாதுகாப்பு பிரதிநிதிகளுக்கான குழுக் கூட்டம்

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 29 , மு.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

கல்முனை தமிழ் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சிவில் பாதுகாப்பு பிரதிநிதிகளுக்கான குழுக் கூட்டம்  கல்முனை தமிழ் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

கல்முனையில் இடம்பெறுகின்ற குற்றச்செயல்கள், அநாமதேய செயற்பாடுகள், சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டு  அவற்றை இல்லாதொழிப்பதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பிலும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

பிரதேச செயலாளர் வீ.லவநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீ.பியசேன பிரதம அதிதியாக கலந்துகொண்டார். கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, கல்முனை சிறிசுமத்திராம விஹாரையின் விஹாராதிபதி றன்முத்துகல சங்கரத்தின தேரோ, கல்முனை பொலிஸ் நிலையத்தின் பெருங்குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி எம்.ஐ.எம்.சதாத், சுகாதார வைத்திய அதிகாரி, ஏனைய துறைசார் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சிவில் பாதுகாப்புக்குழு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .