2025 ஜூன் 25, புதன்கிழமை

கடல் கொந்தளிப்புக் காரணமாக படகுகள் சேதம்

Kogilavani   / 2011 டிசெம்பர் 29 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் பகுதியில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்புக் காரணமாக நிலப் பகுதிக்குள் நீர்புகுந்துள்ளதுடன் அங்கு தரித்து வைக்கப்பட்டிருந்த தோனி மற்றும் படகுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, அட்டாளைச்சேனைப் பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல்.எம். நசீரின் ஆலோசனைக்கிணங்க - உதவித் தவிசாளர் எம்.ஏ.அன்சில், எஸ்.எல். முனாஸ் மற்றும் ஏ.எல்.அமானுல்லா ஆகியோர் ஒலுவில் பிரதேசங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டனர்.

அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட அசாதாரண காலநிலை காரணமாக இங்குள்ள அநேகமான கடற்தொழிலாளர்கள் கடந்த ஒரு மாத காலமாக தொழிலுக்குச் செல்லாதால் இவர்களின் ஜீவனோபாயம்  பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போதைய கடல் கொந்தளிப்புக் காரணமாக ஒலுவில் பகுதியில் கடலரிப்பின் வேகம் அதிகரித்துள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.



                                                                                                                                                                                                                                                               

 


You May Also Like

  Comments - 0

  • suresh Friday, 30 December 2011 03:43 AM

    நோக்கம் என்னவோ . நல்ல செய்திகளில் மிகவும் முக்கியமானது .... வாழ்த்துக்கள் திரு.ஹணிக் அகமட்

    Reply : 0       0

    siraj Friday, 30 December 2011 04:11 AM

    இதனை யார் கண்டு கொள்வார்கள்?

    Reply : 0       0

    chenaiooran Friday, 30 December 2011 04:54 AM

    எத்தன தரம்தான் பார்த்திட்டாரு, ஆனா இன்னும் ஒன்னுமே நடக்கல, போட்டோதான் pidiththu ththalraru,

    Reply : 0       0

    சிறாஜ் Friday, 30 December 2011 05:29 AM

    சேனையூரானுக்கு என்ன செய்யனும்? பொறாமையா இருக்கா இவர்களை பார்த்தால்?

    Reply : 0       0

    janoovar Friday, 30 December 2011 04:25 PM

    பார்தீட்டிங்க, அடுத்த கட்ட நடவடிக்கையையும் கொஞ்சம் மக்களுக்கு சொல்லுங்கள்.

    Reply : 0       0

    zaro Friday, 30 December 2011 10:54 PM

    ஆமா க.உ. போல இவர்கள் பார்த்து விட்டு மட்டும் போய் மக்களை ஏமாற்ற மாட்டார்கள். இவர்களால் முடியா விட்டாலும் உரிய இடத்துக்கு சொல்லிச் செய்ய வைப்பார்கள் புரிந்து கொள்ளவும்.

    Reply : 0       0

    சிராஜ் Friday, 30 December 2011 10:54 PM

    நிஜம் எது நிழல் எது

    Reply : 0       0

    fareed Saturday, 31 December 2011 11:44 PM

    கடல் அரிப்பு தடுப்பு திட்டத்தை அதிகாரிகள் கொண்டு வந்த போது சில உள்ளூர் மக்கள் நிறுத்தினார்கள். இப்போது அனுபவிக்கிரர்கள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .