2025 ஜூன் 25, புதன்கிழமை

மருதமுனையில் வீடுகள் கையளிப்பு

Kogilavani   / 2011 டிசெம்பர் 30 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

மருதமுனையில் வாழ்வாதார திரியபியச வீடுகள் கையளிப்பும் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை  இடம்பெற்றது.

மருதமுனை சமுர்த்தி வங்கி, வலய அலுவலகத்தினால் இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. 

இந்நிகழ்வில் சமுர்த்தி உதவிபெறும் குடும்பங்களின் மனைப் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன் 3 குடும்பங்களுக்கு சமுர்த்தி வேலைத்திட்டத்தினூடாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் கையளிக்கப்பட்டன.

சமுர்த்தி முகாமையாளர் எஸ்.எஸ். பரீறா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நௌபல், சமுர்த்தி தலைமை காரியாலய  முகாமையாளர் ஏ.ஆர்.எம். சாலிஹ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • Majeed Saturday, 31 December 2011 01:16 AM

    இதுல comis எதுவும் இல்லையே?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .