2025 ஜூன் 25, புதன்கிழமை

சட்டவிரோதமாக மாடுகளை கொண்டு சென்றவர் கைது

Super User   / 2012 ஜனவரி 01 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

நாவிதன்வெளி, சவளைக்கடை பிரதேசத்தில் அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமாக நான்கு மாடுகளை கொண்டு சென்றவரை நேற்று சனிக்கிழமை சவளைக்கடை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மாடுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, வெல்லாவெளி பிரதேசத்திலிருந்து நற்பட்டிமுனை பிரதேசத்திற்கு கொண்டுவரப்பட்ட மாடுகளை சவளைக்கடை வாசிகசாலை சந்தியில் வைத்து கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சந்தேகநபர் இன்று ஞாயிற்றுக்கிழமை 10,000 ரூபா பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன் எதிர்வரும் 3ம் திகதி செவ்வாய்ககிழமை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆயஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சவளைக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .