2025 ஜூன் 25, புதன்கிழமை

அக்பர் வித்தியாலயத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 03 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

கல்முனைப் பிரதேச பெரிய நீலாவனை அக்பர் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அக்பர் வித்தியாலயத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று திங்கட்கிழமை  நடைபெற்றது.

அக்பர் கிராமத்தின் முதலாவது அதிபர் ஏ.எம்.ஜிப்ரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  அதிதிகளாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எல்.துல்கர் நயீம், கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.டீ.ஏ.தௌபீக், பிரதிக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். கோட்டைக் கல்விப்பணிப்பாளர் எஸ்.எல்.ஏ.றஹீம், உதவிக்கல்விப் பணிப்பாளர்(முன்பள்ளி) ஏ.எல். சக்காப் உள்ளிட்ட சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

தரம் 1 தொடக்கம் தரம் 4 வரையான வகுப்புக்களை ஆரம்பிப்பதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ள இப்பாடசாலையில் புதிய மாணவர்களை  சேர்க்கும் நிகழ்வும் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமானது.


You May Also Like

  Comments - 0

  • kiyas Tuesday, 03 January 2012 08:58 PM

    Congratulation

    Reply : 0       0

    s.a.riswan Wednesday, 04 January 2012 12:57 AM

    santhosam

    Reply : 0       0

    s.a.riswan Wednesday, 04 January 2012 12:59 AM

    கங்ராஜுலேஷன் டு அக்பர் vidyalayam

    Reply : 0       0

    sainthamaruthu Friday, 06 January 2012 03:24 AM

    தொடரட்டும் முன்னேற்றத்துடன், வாழ்த்துக்கள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .