2025 ஜூன் 25, புதன்கிழமை

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கராத்தே பயிற்சி முகாம்

Kogilavani   / 2012 ஜனவரி 06 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உடற்பயிற்சி பிரிவினால் ஏற்பாடு செய்யபட்ட ஒருநாள் கராத்தே பயிற்சி முகாம் இன்று வியாழக்கிழமை இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உள்ளக அரங்கில் இடம்பெற்றது.

இப்பயிற்சி முகாமிற்கு பிரதம பயிற்றுவிப்பாளராக ஜப்பான் நாட்டைச்சேர்ந்த சர்வதேச கராத்தே பயிற்றுவிப்பாளரும் கிரேன் மாஸ்டருமான சிகான் சிரோனி ஓட்டா கலந்து கொண்டார்.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழக பதிவாளர் எச். அப்துல் சத்தார் கலந்து கொண்டார்.

இப்பயிற்சி நெறியின்போது இப்பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடாதிபதி கே.எம்.எம். பழில் ஹக், உடற்பயிற்சி பிரிவின் தவிசாளர் டாக்டர் ஏ. ஜஃபர், உடற்பயிற்சி பிரிவின்  பொறுப்திகாரியும் போதனாசிரியருமான எம்.எல்.ஏ.தாகீர், உடற்பயிற்சிப்பிரிவின் கராத்தே பயிற்றுவிப்பாளர் ஏ.ஆர்.முஹம்மது இக்பால், இலங்கை சொட்டோகன் கராத்தே  சம்மேளனத்தின் போதனாசிரியர் டீ.எம்.டீ. நிமால் ஆகியோருடன் பல்கலைக்கழக விரிவுளையாளர்களும் கலந்து கொண்டனர்.



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .