2025 ஜூன் 25, புதன்கிழமை

டெங்கு விழிப்பு நடவடிக்கை

Super User   / 2012 ஜனவரி 07 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

சம்மாந்துறைப் பிரதேசத்தில் 12 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டதை அடுத்து சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், சம்மாந்துறை பிரதேச செயலகம், சம்மாந்துறை பொலிஸ் சூழல் பாதுகாப்பு பிரிவு மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை ஆகியன இணைந்து நேற்று வெள்ளிக்கிழமை டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வில் சுகாதார வைத்திய அதிகாரிகளான டாக்டர் எஸ்.எப்.இஸ்ஸானா, டாக்டர் திலானி தயரத்ன, தலைமை பொது சுகாதார பரிசோதகர் ஐ.எல்.றாசீக் மற்றும்  சூழல் பாதுகாப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.நிஸார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இவர்கள் சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று விழிப்பூட்டல் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் பரிசோதனைகளையும் மேற்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .