2025 ஜூன் 25, புதன்கிழமை

ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 08 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

சாய்ந்தமருது பிரதேச செயலக அரச சேவை ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலய நூற்றாண்டு மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்தின் சாய்ந்தமருது கிளைத் தலைவர் எம்.ஐ.அப்துல் ஜப்பார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாகவும் அம்பாறை மாவட்ட ஓய்வூதியர் சங்கத் தலைவர் ஓ.டபிள்யூ.டி.பி. விஜயகுருசிங்க, செயலாளர் ஏ.அஹமட் முஹைதீன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர். 

முன்னாள் செயலாளர் ஏ.எம்.இப்றாஹிம் மற்றும் பொருளாளர் எம்.ஐ.எம்.காசிமும் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .