2025 ஜூன் 25, புதன்கிழமை

சங்கமன்கண்டி - காட்டுப் பிள்ளையார் ஆலயத்தில் யானை அட்டகாசம்

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 08 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அம்பாறை மாவட்டத்திலுள்ள சங்கமன்கண்டி - காட்டுப் பிள்ளையார் ஆலயத்திற்குள்  நுழைந்த யானையொன்று ஆலயத்தையும் அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளது. நேற்று சனிக்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆலய வளாகத்திற்குள் நுழைந்த யானை ஆலயத்தின் பின்பகுதி அறைக் கதவுகளை உடைத்ததுடன், அங்கிருந்த தளபாடங்கள் மற்றும் பூஜை பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளது. 

கடந்த காலங்களிலும் ஆலய வளாகத்திற்குள்  யானைகள் நுழைந்து அங்குள்ள கட்டிடங்களைச் சேதப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

                  


You May Also Like

  Comments - 0

  • neethan Sunday, 08 January 2012 05:54 PM

    யானை பாதுகாப்பு மின் வேலி அமைத்தால் என்ன? எம்.பி.பியசேன உதவியை ஆலய நிர்வாகம் பெறவேண்டும்.

    Reply : 0       0

    suran Sunday, 08 January 2012 10:28 PM

    யானைதானா ?

    Reply : 0       0

    manasatsi Monday, 09 January 2012 03:00 AM

    காட்டுக்குள் கோவில் இருந்தால் யானையும் உடைக்கும் ஐயா ...அது யானையின் இருப்பிடம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .