Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Super User / 2012 ஜனவரி 09 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார், ரி.லோஹித்)
உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான இரு நாள் செயலமர்வு இன்று திங்கட்கிழமை அக்கரைப்பற்றில் ஆரம்பமானது.
புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கும் உள்ளளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை உள்ளளூர் ஆளுகை நிறுவகம் இதனை ஏற்பாடு செய்துள்ளது.
கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.உதயக்குமார் தலைமையில் நடைபெற்று வரும் இச்செயலமர்வின் அங்குரார்ப்பண நிகழ்வில் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, கிழக்கு மாகாண முதலமைச்சர் எஸ். சந்திரகாந்தன், உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் டாக்டர் நிஹால் ஜயசிங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கல்முனை மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபைகள் உள்ளிட்ட 20 உள்ளூராட்சி மன்றங்களின் 200 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ் மொழி மூல இச்செயலமர்வு அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கிலும் சிங்கள மொழி மூலமான செயலமர்வு அக்கரைப்பற்று தொழில்நுட்ப கல்லூரியிலும் இடம்பெற்று வருகின்றன.
janoovar Tuesday, 10 January 2012 03:58 AM
கட்டாயம் வழங்க வேண்டும்
Reply : 0 0
senaiyuraan Tuesday, 10 January 2012 04:42 AM
பயிற்சி இல்லாமல் பணம் கொடுத்து தெரிவானவர்கள் இருப்பது அமைச்சருக்கு விளங்கித்தான் செய்கிறார் என நினைக்கன்.
Reply : 0 0
meenavan Tuesday, 10 January 2012 05:07 AM
எவ்வகையான பயிற்சி இரு நாட்களிலும் வழங்கப்படுமோ? இரு இடங்களிலும் நிகழும் செயலமர்வு ஒரே மாதிரி செயத்திறனுடயதா? இருநூறு உறுப்பினர்களுக்கும் செயலமர்வை அதாவுல்லா அரங்கில் வைத்து மொழி பெயர்ப்பு வசதிகள் செய்து கொடுத்திருக்கலாம்.
Reply : 0 0
maruthoor rizvi QTR Tuesday, 10 January 2012 08:06 PM
மீனவன் நீங்க செய்தியை நல்லா பாருங்க பிறகு அதை நன்கு விளங்கி புரிந்து விட்டு அதன் பின்னர் தான் கருத்து எழுதுங்கள். இதே உங்களுக்கு வேலையா போச்சுது
Reply : 0 0
meenavan Wednesday, 11 January 2012 12:54 AM
செய்தியை விளங்காமல் கருத்து எழுத முடியாது,ஆனால் ஒவ்வருவரினதும் விளங்கும் ஆற்றல் வித்தியாசமானது, இருநூறு உறுப்பினர்களுக்கான இரு நாள் செயலமர்வு, ஒரே ஊரின் இரு இடங்களில் இரு மொழிகளில் இடம்பெறுகிறது செய்தியின் சுருக்கம், பெரும்பான்மை உறுப்பினர்கள் தாய் மொழி தமிழை கொண்டவர்கள் என்பதனால் அதா அரங்கில் வைத்து மொழி பெயர்ப்பு வசதி செய்திருக்கலாம் இதில் பிழை இல்லையே? நமது தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்குவதே எனது எண்ணம். maruthoor rizvi plse. read the article properly & understand,then makes comments
Reply : 0 0
சிறாஜ் Wednesday, 11 January 2012 03:20 AM
தேவையும் இல்லாமல் இது பற்றிய எந்த அறிவும் இல்லாம இங்கு கொமண்ட் பண்ணி இருக்கும் சேனையூரான் மற்றும் மாவன்னாக்களுக்கு இது பயிற்சி இங்கு மட்டுமல்ல, இதுக்கு மட்டுமல்ல எல்லா இடங்களிலும் ஆசிரியர்களுக்கு மற்றும் புதிய எம்பி மாருக்கு அமைச்சர் மாருக்கு இப்படி பல வகையான கருத்தரங்குகள் நடைபெறும், ஆனால் இது சம்மந்தப்பட்டவர்களுக்கே விளங்கும்.
Reply : 0 0
senaiyuraan Thursday, 12 January 2012 10:26 PM
நான் சொன்ன கருத்தும் அது சம்மந்தப்பட்டவர்களுக்குத்தான் விளங்கும். சும்மா மூக்க உடைக்க வேண்டாம் சிராஜ்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago