Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2012 ஜனவரி 16 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தாண்டியடி – சங்கமன் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் - தமது வீடுகளுக்கு மின்சார இணைப்பினைப் பெறுவதற்காக கடந்த மூன்று, நான்கு மாதங்களுக்கு முன்னர் மின்சார சபையின் அக்கரைப்பற்றுக் காரியாலயத்தில் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து அதற்கான பணத்தினைச் செலுத்தியுள்ள போதும் அவர்களுக்கான மின்சார இணைப்பு இதுவரை வழங்கப்படவில்லை என விசனம் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக மின்சார சபையின் அக்கரைப்பற்றுக் காரியாலயத்துக்குச் சென்று தமக்கான மின்சார இணைப்பினை வழங்கும் படி – உரிய அதிகாரிகளிடம் பல தடவை தாம் கோரிக்கை விடுத்துள்ள போதும் உரிய பலன் கிடைக்கவில்லை என்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் கூறுகின்றனர்.
இது தொடர்பில் தமது வீட்டுக்கு மின்சார இணைப்பினைப் பெறும் பொருட்டு பணம் செலுத்தியுள்ள பெண்ணொருவர் கூறுகையில்ளூ
'மின்சார இணைப்பினைப் பெறுவதற்கான பணத்தினைச் செலுத்துவதற்காக - நகைகளை அடகு வைத்தும், வட்டிக்குப் பணம் பெற்றுமே நான் பணத்தினைத் திரட்டினேன். ஆனால், பணம் செலுத்தி 04 மாதங்களாகி விட்டன. இன்னும் இணைப்புக் கிடைக்கவில்லை. அதேவேளை, இணைப்பைப் பெறுவதற்காக வட்டிக்கும், அடகு வைத்தும் பெற்ற பணத்துக்கான மாதந்த வட்டியை நான் செலுத்த வேண்டியுள்ளது.
இதேவேளை, மேற்படி சங்கமன் கிராமத்திலிருந்து மின்சார சபையின் அக்கரைப்பற்றுக் காரியாலயம் சுமார் 25 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. இக் காரியாலயத்துக்கு அடிக்கடி சென்று வருவதென்பது எமக்கு அலைச்சலையும், மேலதிக பணச் செலவினையும் ஏற்படுத்துகிறது' என்றார்.
தாண்டியடி – சங்கமன் கிராமத்தில் யானைகளின் அச்சுறுத்தல் உள்ள நிலையில், இங்குள்ள மக்கள் இரவு வேளைகளில் மின்சார வெளிச்சமின்றி இருப்பது மிகவும் ஆபத்தானதானது எனத் தெரிவிக்கும் பொதுமக்கள், தமக்கான மின்சார இணைப்பினை இனியும் காலம் தாழ்த்தாது, உடனடியாக வழங்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.
neethan Monday, 16 January 2012 11:56 PM
வங்கியில் அடகு வைத்து மின்சாரசபைக்கு செலுத்திய தொகைக்கு மின்சார சபை வட்டி வழங்குமா? அல்லது நாலு மாத தாமத மின்னினைப்புக்கு பகரமாக முதல் மாத மின்சார கட்டணத்தை வாடிக்கையாளருக்கு இலவசமாக வழங்குமா?
Reply : 0 0
Mohamed Osama Tuesday, 17 January 2012 05:09 AM
அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதை எப்போதுதான் விடப் போகின்றார்களோ......
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago