Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2012 ஜனவரி 17 , மு.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.ஜே.எம்.ஹனீபா)
ஜனாதிபதியின் நாட்டுக்கு நிழல் என்னும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை சமூக நல மேம்பாட்டு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பிரதான வீதியோரங்களில் நிழல் தரும் மரங்களை நடும் வேலைத்திட்டம் நேற்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
'வீதிக்கு வாசம் ஊருக்கு சுவாசம்' என்னும் தொனிப்பொருளில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அமைப்பின் தலைவர் ஐ.நாசர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், நிந்தவூர் பிரதேச செயலாளர் றிபா ஜலீல், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்ஷாட், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயந்த தஹனக்க, முன்னாள் தவிசாளர் எம்.ஐ.எம்.மன்சூர், வீரச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.எஸ்.ஏ.காதர், தென்கிழக்கு பல்கலைகழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி றமீஸ் அப்துல்லா, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார், மத்தியஸ்த சபையின் தலைவர் எஸ்.எச்.ஏ.றாசீக், அதிபர் ஹபீறா சலீம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago