2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கணவர் காணாமல் போனதால் மனைவி தற்கொலை; கணவர் சடலமாக மீட்பு

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 17 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற கணவர் காணாமல் போனதைத் தொடர்ந்து மனைவி தற்கொலை செய்துகொண்ட  சம்பவமொன்று அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் கஞ்சிகுடிச்சாறு பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

இதன் பின்னர் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படும் நபர் இன்று செவ்வாய்க்கிழமை காலை 6 மணியளவில் சடலமாக பொலிஸாரால்  மீட்கப்பட்டுள்ளார்.  

கஞ்சிகுடிச்சாறு பிரதேசத்தை சேர்ந்த 4  பிள்ளைகளின் தந்தையான செல்லத்துரை நடேசப்பிள்ளை  (வயது 62) என்பவரே திருக்கோவில் கஞ்சிகுடிச்சாறு குளத்தில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் மீன்பிடிக்க சென்றபோது  காணாமல் போனவர் ஆவார்.

குறித்த நபரை தேடியபோதிலும், அவர் தொடர்பான எந்தவித தகவலும்  கிடைக்காத  நிலையிலேயே மனைவி நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0

  • neethan Tuesday, 17 January 2012 06:58 PM

    கணவர் காணாமல் போனமையின் ஆற்றாமை, மனைவியின் தற்கொலைக்கு காரணமாக அமைந்துவிட்டது. மனமொத்து வாழ்ந்த தம்பதியர் சாவிலும் இணைந்துவிட்டனர். குடும்ப உறுப்பினர்களுக்கு அனுதாபங்கள்.

    Reply : 0       0

    suman Tuesday, 17 January 2012 11:10 PM

    பிள்ளைகளின் எதிர்காலம் என்ன?

    Reply : 0       0

    human Wednesday, 18 January 2012 03:23 AM

    மெண்டல் டிச்பிரசன் தகுந்த அறிவுரை சொல்ல ஆளில்லை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .