2025 ஜூன் 26, வியாழக்கிழமை

யுத்தகாலத்தில் கிழக்கில் மூடப்பட்ட இரு தமிழ் பாடசாலைகள் மீண்டும் திறப்பு

Menaka Mookandi   / 2012 ஜனவரி 18 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கடந்த யுத்த சூழ்நிலை காரணமாக மூடப்பட்டிருந்த இரு தமிழ் பாடசாலைகள் கடந்த வாரம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.

அம்பாறை கல்வி வலயத்திற்குட்பட்ட அம்பாறை தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் திருகோணமலை கல்வி வலயத்திற்குட்பட்ட முதலிகுளம் தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளே இவ்வாறு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வித்திணைக்கள பிரதி கல்விப் பணிப்பாளர் பிரபாத் விதானகே தெரிவித்தார்.

இன்னும் சில தினங்களுக்குள் திருகோணமலை வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மொரவெவ வடக்கு வித்தியாலயம் மற்றும் சரண ஜயந்திபுர வித்தியாலயம் ஆகியனவும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக திறந்து வைக்கப்படவுள்ளதாக கல்விப்பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

கடந்த கால யுத்த சூழ்நிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் மாணவர்களின் வரவின்மை காரணமாக 27 பாடசாலைகள் மூடப்பட்டன. இன்னும் சில பாடசாலைகளை திறப்பதில் பலவிதமான சிக்கல் நிலை காணப்படுவதால் அவற்றையும் படிப்படியாக திறப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன' என்று அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .