Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2012 ஜனவரி 19 , மு.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார்)
நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த அம்பாறை ஹிங்குராண சீனித்தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகள் மீண்டும் இவ்வருடம் ஜூன் மாதமளவில் ஆரம்பிக்கவுள்ளதாக கல்லோயா பெருந்தோட்டக் கம்பனியின் நிறைவேற்று அதிகாரி காமினி ரட்னாயக்கா தெரிவித்தார்.
மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் மேற்படி 1,900 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், எதிர்வரும் ஜூன் மாதமளவில் கரும்பை அறுவடை செய்து அதனை சீனியாக மாற்றுவதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதுடன், சீனியினை சுத்திகரிப்பது முதல் சீனி உற்பத்தியினை மேற்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த தொழிற்சாலையினால் நாளொன்றுக்கு 160 மெற்றிக்தொன் சீனியினை உற்பத்தி செய்ய முடியும். இத்தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கையினை ஆரம்பிப்பதன் மூலம் 1,100 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பினை வழங்க முடியும்.
இவ்வருடம் 1300 ஹெக்டெயர் நிலத்தில் கரும்புச் செய்கை மேற்கொள்ள்பட்டு வருவதுடன், கடந்த வருடம் 750 ஹெக்டெயர் நிலத்தில் கரும்புச் செய்கை மேற்கொள்ளப்பட்டது.
இத்தொழிற்சாலை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு சீனி சுத்திகரிக்கப்படவுள்ளது என கல்லோயா பெருந்தோட்டக் கம்பனியின் நிறைவேற்று அதிகாரி மேலும் தெரிவித்தார்.
Mohamed Musthapha M M Thursday, 19 January 2012 05:33 PM
இது ஒரு நல்ல வேலை. வாழ்க இந்த பூமி.
Reply : 0 0
Nanpan Friday, 20 January 2012 12:38 AM
நமது பொன் விளையும் நெற்காணிகள் பலிகடாகளாக போகின்றன. விசேடமாக இறக்காமம், நீத்தை, வரிபபதான்சேனை
Reply : 0 0
IYA Monday, 23 January 2012 01:37 AM
வாழைச்சேனை கடதாசிக்கூட்டுதாபனத்துக்கு என்ன நடக்கும் ? அதற்க்கு மூடுவிழாவா ? ஏனென்றால் அது தமிழ் பகுதியில் இருக்கிறது . எப்போது மாறும் உங்கள் மாற்றாந்தாய் மனப்பாங்கு .
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago