2025 ஜூன் 26, வியாழக்கிழமை

பொத்துவிலில் சுருக்குவலை பயன்பாட்டால் கரையோர மீன்பிடி பாதிப்பு

Menaka Mookandi   / 2012 ஜனவரி 19 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஜகான்)

பொத்துவில் கடற்பரப்பில் எல்லை நிர்ணயமின்றி சுருக்கு வலை பயன்படுத்துவதனால் கரையோர மீன்பிடி பாதிக்கப்படுவதாக காதிரிய்யா மீன்பிடி கூட்டுறவு சங்கத்தின் தலைவர் மீராமுகைதீன் தெரிவித்தார்.

1996ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க கடற்றொழில் நீரியல் வளங்கள் கட்டளைச்சட்டத்தின் கீழ் இலங்கை கடற்பரப்பினுள் வெளிச்ச கவர்ச்சியின்றி சுருக்கு வலை பயன்படுத்துவது  மைல் வரையான கடல் வலயத்தினுள் தடை செய்யப்பட்டுள்ளது.

இச்சட்டத்தை மீறி இப்போது பொத்துவில் கடற்பரப்பினுள்  சிலர் எல்லை மீறி 7 மைல்களுக்குட்பட்ட பகுதியில்  சுருக்கு வலை பயன்படுத்துவதனால் கரையோர மீன்பிடி பாதிப்படைந்துள்ளது.

இதுபற்றி சம்பந்தப்பட்டவர்களுக்கு பல முறையீடுகள் செய்தும் பயன் கிட்ட வில்லை. 1996ஆம் ஆண்டின் 2ம் இலக்க கடற்றொழில் நீரியல் வளங்கள் கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் எல்லை தெளிவாக இடப்பட்டால் இப்பிரச்சினையை தீர்க்க முடியும்' என்று அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0

  • anmrizath Monday, 23 January 2012 03:17 AM

    we look forward this news to take the action against to that.and welcome to this news cordially

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .