2025 ஜூன் 26, வியாழக்கிழமை

இலவச மனித உரிமைகள் டிப்ளோமா பாடநெறி

Kogilavani   / 2012 ஜனவரி 20 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

அக்கரைப்பற்று பிரதேசத்தில் யூ.எஸ்.எய்ட். அமைப்பின் எஸ்.யூ.ஆர்.ஜீ. நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்து சமாதான சமூக மேம்பாட்டு அமைப்பானது, இலவச மனித உரிமைகள் டிப்ளோமா பாடநெறி ஒன்றை இலவசமாக நடாத்த உள்ளது.

பெப்ரவரி மாதம் முதலாம் வாரத்தில் ஆரம்பிக்கப்பட உள்ள இப் பாடநெறிக்கான விண்ணப்பங்கள் ஏற்கனவே கோரப்பட்டுள்ள போதும் இம்மாதம் இறுதி வரை விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட உள்ளதாக சமாதான சமூக மேம்பாட்டுக்கான அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளர் எம்.ஐ.ஜுனைடீன் தெரிவித்தார்.

அரச, அரச சார்பற்ற நிறுவனங்களில் பணிபுரிவோரின் நன்மைகருதி, இடம்பெறவுள்ள இப்பாடநெறி தொடர்பான தகவல்களை பெற விரும்புவோர் பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளனர். (0771616761)


You May Also Like

  Comments - 0

  • Iya Sunday, 22 January 2012 03:05 PM

    இலங்கைக்கு இந்த டிப்ளோமா பொருத்தமற்றது . ஏனென்றால் இங்கு மனித உரிமைகள் மதிக்கப்படுவதில்லை . வேறு டிப்ப்ளோமாக்களை ஆரம்பியுங்கள் . முடித்தாலும் வேலையில்லை .இதுதான் ஆசியாவின் அதிசயம் ,வடக்கின் வசந்தம் , கிழக்கின் உதயம் .

    Reply : 0       0

    gaf Sunday, 22 January 2012 07:36 PM

    உண்மையிலே நல்லதொரு பாடநெறி. கட்டாயம் அனைவரும் படித்திருக்க வேண்டும். விண்ணபிக்க உதவிய தமிழ் மிரருக்கு நன்றிகள் .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .