2025 ஜூன் 26, வியாழக்கிழமை

விழிப்புணர்வு பதாகைகள் நாட்டிவைப்பு

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 22 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

சிறுவர் துஷ்பிரயோகத்தை குறைப்பதற்காகவும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டத்தின் கீழும் அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவில்வரை 40 கிலோமீற்றர் தூர வீதியோரங்களில் விழிப்புணர்வு பதாகைகள் நாட்டப்பட்டு திறந்துவைக்கப்பட்டன.

வேள்ட் விஷன்  நிறுவனத்தின் பொத்துவில் பிராந்திய அபிவிருத்தித் திட்டத்தின் அனுசரணையில்; கிழக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்கழகத்தின் அக்கரைப்பற்று காரியாலயத்தின் ஊடாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின்  அனுமதியுடனும் இப்பதாகைகள் நாட்டப்பட்டன.

இந்நிகழ்வில் செட்டா நிறுவனத்தின் முகாமையாளர் எஸ்.கோபிநாத், வேள்ட் விஷன் நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் சி.றொபின்சன் மார்ஷல், சிறுவர் பராமரிப்பு உத்தியோகத்தர் தல்கார், அக்கரைப்பற்று சிறுவர் நன்னடத்தைப் பிரிவு
திணைக்கள அதிகாரி, நிறுவன உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • pasha Monday, 23 January 2012 08:17 PM

    அக்கரைப்பற்று, பொத்துவில் பகுதிகளுக்கு தேவையான ஒரு நடவடிக்கை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .