2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சாய்ந்தமருது ஒஸ்மான் வீதியில் வெடிபொருட்கள் மீட்பு

Kogilavani   / 2012 ஜனவரி 23 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எஸ்.மாறன்,எஸ்.எம்.எம்.றம்ஸான்)

சாய்ந்தமருது ஒஸ்மான்  வீதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் வெடிபொருட்கள் சிலவற்றை இன்று திங்கட்கிழமை காலை மீட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றினைத் தொடர்ந்து குறித்தக் காணியில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, பொலித்தின் பையினால் சுற்றப்பட்ட நிலையில்; 84 எல் ரக துப்பாக்கி ரவைகள் 70, ரி.56 ரக துப்பாக்கி ரவைகள் 220, எஸ்.பி வெடிமருந்து ஒன்று என்பன மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0

  • ismail Tuesday, 24 January 2012 07:19 AM

    sollavailla

    Reply : 0       0

    ***மல்லிகை சிராஜ் ***siro Wednesday, 25 January 2012 09:44 PM

    இது சொல்லிட்டு செய்ற விஷயமா .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .