Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2012 ஜனவரி 24 , மு.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ்)
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின்போது 3 பேருக்கு எதிராக பொலிஸாரினால் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள வீடுகள் மற்றும் பொது இடங்களிலும் டெங்கு ஒழிப்பு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போதே டெங்கு நுளம்பு காணப்பட்ட 3 குடும்பத்தவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 20 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி சகீலா இஸ்ஸடீன் தலைமையில்; பொதுச் சுகாதார பரிசோதகர்களான நியாஸ் எம்.அப்பாஸ், ஏ.எம்.பாரூக், ஏ.எம்.நஜீமுடீன் ஆகியோரை உள்ளடக்கி 3 குழுக்களாக இந்த பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பொலிஸார், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோரும் இக்குழுக்களில் அடங்கியிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago