2025 ஜூன் 26, வியாழக்கிழமை

டெங்கு நுளம்பு பரவும் சூழலை வைத்திருந்த மூவருக்கு எதிராக வழக்குத் தாக்கல்

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 24 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின்போது 3 பேருக்கு எதிராக பொலிஸாரினால் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள வீடுகள் மற்றும்  பொது இடங்களிலும் டெங்கு ஒழிப்பு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போதே டெங்கு நுளம்பு காணப்பட்ட 3 குடும்பத்தவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 20 க்கும்  மேற்பட்ட குடும்பங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி சகீலா இஸ்ஸடீன் தலைமையில்; பொதுச் சுகாதார பரிசோதகர்களான நியாஸ் எம்.அப்பாஸ், ஏ.எம்.பாரூக், ஏ.எம்.நஜீமுடீன் ஆகியோரை உள்ளடக்கி  3 குழுக்களாக இந்த பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பொலிஸார், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோரும் இக்குழுக்களில் அடங்கியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .