2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சேனைக்குடியிருப்பில் முதல் மருத்துவ மாணவனுக்கு பாராட்டு

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 26 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

அம்பாறை மாவட்டத்தின் சேனைக்குடியிருப்பிலிருந்து முதன்முறையாக மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவனான சத்தியநாதன்  கிருஷாந்தை பாராட்டும் நிகழ்வு சேனைக்குடியிருப்பு வின்னர் விளையாட்டுக் கழகம் மற்றும் சேனைக்குடியிருப்பு மகளிர் பொருளாதார சமூக அபிவிருத்தி அமைப்பு ஆகியவற்றின் அனுசரணையுடன் சேனைக்குடியிருப்பு கணேச மஹாவித்யாலயத்தில்  அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கால்நடை மற்றும் மீன்பிடி விவசாயத்துறை அமைச்சர் துரையப்பா நவரத்னராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஜெகதீசன், கல்முனை பிரதேச செயலாளர் லவநாதன், கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி அதிபர் அருட்சகோதரர் ஸ்ரீபன் மத்தியூ உள்ளிட்ட அதிதிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட அமைச்சர் துரையப்பா நவரத்னராஜா மாணவனுக்கு  நினைவுச்சின்னம் வழங்கியதுடன்;,  கல்லூரியின் அதிபர் வாழ்த்துப்பா ஒன்றினையும்  வழங்கினார்.

2011ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும் இதன்போது கௌரவிக்கபட்டனர். புலமைப்பரிசில் பரீட்டையில் 173 புள்ளிகளைப் பெற்ற சத்தியநாதன் ரக்;ஷனாவும் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.


You May Also Like

  Comments - 0

  • Iya Friday, 27 January 2012 12:27 AM

    முதல் மருத்துவ மாணவனுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். எனது வினாவுக்கு இந்நிகழ்வை ஒழுங்குபடுத்தியவர்கள் விடையளிக்க வேண்டும் . எவ்வளவு படித்தவர்கள் இருக்கும்போது............

    Reply : 0       0

    batti Friday, 27 January 2012 01:38 AM

    வாழ்த்துக்கள் கிருஷாந்த் ................

    Reply : 0       0

    ummpa Friday, 27 January 2012 06:21 AM

    உங்கள் ஆரம்பம் சேனைக்குடியிருப்பிலிருந்து அடுத்தவருடம் பலர் சித்திடையவேண்டும் என்ற அவாவுடன் உங்களையும் , பெற்றார் மற்றும் ஆசிரியர் குலத்துக்கும் முஸ்லிம்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    bya Saturday, 28 January 2012 01:36 AM

    அது யாரு அது எவ்வளவு படிச்ச ஆள் எண்டு தெரிஞ்சி கொள்ளலாமா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .