2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கலை, இலக்கியப் போட்டிகளில் வெற்றிப்பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 ஜனவரி 27 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல் அஸீஸ்)
2011 - தேசிய கலை, இலக்கிய விழாவினை முன்னிட்டு கல்முனை பிரதேசரீதியாக நடாத்தப்பட்ட கலை, இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மாலை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், பல பிரிவுகளாக நடாத்தப்பட்ட கலை, இலக்கிய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கப்பட்டதுடன், கல்முனை பிரதேச கலை இலக்கிய பிரிவுகளினால் வெளியிடப்பட்ட மலர்களும் கலாசார பேரவை உறுப்பினர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.

கலாசார உத்தியோகத்தர் திருமதி வி.பற்பராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல், பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் அபுல்ஹசன் உட்பட கலாசார பேரவை உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள், மாணவர்களும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • Mohamed Ithreees Saturday, 28 January 2012 07:35 AM

    ஊக்கம் அளியுங்கள் வாழ்வில் முன்னேரட்டும் நன்றி இத்ரீஸ்.பெரிய நீலாவணை-01

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .