2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் பணி பகிஷ்கரிப்பு

Kogilavani   / 2012 ஜனவரி 28 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ், எஸ்.எம்.எம்.ரம்ஸான்)

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் சிற்றூழியர் மேற்பார்வையாளர் ஒருவரை இனந்தெரியாத குழுவொன்று தாக்கிய சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் இன்று காலை முதல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இன்று காலை 6 மணியளவில் வைத்தியசாலையில் உள் நுழைந்த சிறு குழுவினர் குறிப்பிட்ட சிற்றூழியர் மேற்பார்வையாளரை தாக்கிவிட்டு   தலைமறைவாகி உள்ளனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து வைத்தியசாலையில் கடமையாற்றிய சிற்றூழியர்கள் அனைவரும் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கல்முனை பொலிஸார் இச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடன் கைது செய்வதற்கான உறுதிமொழி வழங்கியதை அடுத்து காலை 10 மணியளவில் சிற்றூழியர்களின் எதிர்ப்பு நடவடிக்கையை  கைவிட்டனர்.

இதுத் தொடர்பாக சிற்றூழியர்கள் அமைப்பின் பிரதிநிதி ஒருவர் கருத்து தெரிவிக்கையில் 'குறிப்பிட்ட குழுவினரை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் கைது செய்யாவிடின் மீண்டும் எங்களது எதிர்ப்பு நடவடிக்கைகளை தொடர உள்ளோம்' எனக் கூறினார்.

பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0

  • riswan Saturday, 28 January 2012 06:21 PM

    தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு ஏன் பொது சேவையை நிறுத்துகின்றீர்கள்? இப்படிப்பட்ட பிரச்சனைகளை தீர விசாரணை செய்து சம்மந்தபட்டவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.

    Reply : 0       0

    avathaani Saturday, 28 January 2012 07:02 PM

    இனம்தெரியாத குழு என்பதை விட இனம்தெரிந்த அரசியல் பின்புலத்துடன் உள்ள குழு என்றால் பொருத்தமானது.

    Reply : 0       0

    avathaani Saturday, 28 January 2012 08:05 PM

    Riswan கடமையில் உள்ள ஒருவர் அரசியல் அடிவருடிகளினால் தாக்கப்பட்டாலும் தனிப்பட்ட பிரச்சினையாகுமா?

    Reply : 0       0

    meenavan Saturday, 28 January 2012 08:59 PM

    எப்போது முடியுமோ ஊழியர்களை தாக்கும் கொலவெறி? காவலரண் போலீசார் தூங்குகிறார்களா? அரசியல் அழுத்தம் கடமையை செய்வதில் போலீசாரை குறுக்கிடுகிறதா?

    Reply : 0       0

    ala Saturday, 28 January 2012 09:47 PM

    இனம் தெரியாத குழுவா அடித்தார்கள் அடிபட்டவருக்கு அடித்தவர்கள் யார் என்று தெரியாமலா இருக்கும் ???

    Reply : 0       0

    ummpa Saturday, 28 January 2012 10:02 PM

    யாராக இருந்தாலும் சட்டத்துக்கு முன் எல்லாரும் சமம் . அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்றால் மீண்டும் உங்கள் போராட்டம் தொடரவேண்டும் அப்போதுதான் இந்த சண்டித்தனத்துக்கு வெட்டு வைக்க வேண்டும்.

    Reply : 0       0

    riswan Saturday, 28 January 2012 11:43 PM

    Avathani: இது அரசியல் அடிவருடிகளால்தான் நடந்தது என்பது எப்படி உங்களால் உறுதியாக கூற முடியும். கடமையில் இருக்கும் ஒருவர் தாக்கப்பட்டாலும் அது தனிப்பட்ட காரணத்துக்காகவும் இருக்கலாம் இல்லையா?

    Reply : 0       0

    Nafar Sunday, 29 January 2012 03:41 PM

    எதற்கு எடுத்தாலும் அரசியலா? இருக்கும் நடப்பை அங்கு சென்று பார்த்தால் தான் தெரியும் அவர்கள் நோயாளிகளை எப்படி கவனிக்கிறார்கள் என்று.

    Reply : 0       0

    ***மல்லிகை சிராஜ்*** Sunday, 29 January 2012 04:29 PM

    பாதுகாப்பு என்று சொல்லி கொஞ்சம் ஆட்கள் அதுக்குள்ள இருக்காங்கதான? அவங்க என்ன பண்றாங்க .. இது எல்லாம் அவங்க தொழில் இல்லையா? இது எல்லாம் அவங்க பார்க்க மாட்டங்களா?

    Reply : 0       0

    kalam.... Sunday, 29 January 2012 04:37 PM

    அது சரி ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகுள்ள படங்கள் தான் தமிழ் மிரரில் உள்ளது. ஆனால் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றபோது உள்ள படங்களை உங்கள் பிரதிநிதிகள் எடுக்கவில்லையா ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .