Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Super User / 2012 ஜனவரி 30 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ்)
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் சிற்றூழிய மேற்பார்வையாளரை தாக்கிய மூன்று சந்தேக நபர்கள் இன்று திங்கட்கிழமை பிணையில் விடுதலை செய்யப்படுள்ளனர்.
குறித்த மூன்று சந்தேக நபர்களையும் இன்று கைது செய்த கல்முனை பொலிஸார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
குறித்த மூன்று சந்தேக நபர்களையும் தலா 25,000 ரூபா காசு பிணையிலும் தலா ஒரு இலட்சம் பெறுமதியான இரண்டு ஆட் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டதுடன் பிரதி வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்பமிடுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் சிற்றூழிய மேற்பார்வையாளரொருவர் கடந்த வாரம் ஒரு குழுவினரால் தாக்கப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் கடந்த சனிக்கிழமை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
kulathooran Monday, 30 January 2012 11:51 PM
அரச நிறுவனங்களில் அத்துமீறி ஊழியர்களை தாக்குபவர்கள் இனிமேலாவது திருந்தி நடப்பார்களா? பொலிசாரின் அசமந்த நிலையும் இவ்வாறான நிகழ்வுகளுக்கு காரணமாகும், அவர்களும் தங்கள் கடமைகளில் சிரத்தை எடுக்க வேண்டும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
2 hours ago
2 hours ago
4 hours ago